News April 3, 2025
பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி

வரும் 6ஆம் தேதி தமிழகம் வரும் PM மோடியை இபிஎஸ் சந்தித்துப் பேசவுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இபிஎஸ்ஸை தொடர்ந்து அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாஜக முன்னணி தலைவர்களைச் சந்தித்து வரும் நிலையில், வரும் 6ஆம் தேதி புதிய பாம்பன் தூக்குப் பாலத்தை திறக்க வருகை தரும் PM மோடியை EPS சந்தித்துப் பேசவுள்ளார். அவரைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸும் PM மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
Similar News
News December 6, 2025
சாகவே சாகாத ஜெல்லிமீன் தெரியுமா?

உலகில் நம்மை ஆச்சர்யப்படுத்தும் அறிவியல் அதிசயங்களில் ஒன்று தான், சாவே இல்லாத ஜெல்லிமீன். Turritopsis dohrnii எனப்படும் இந்த கடல் உயிரி, மரண தருவாயை நெருங்கும்போது, அதன் செல்களை மாற்றியமைத்து, மீண்டும் தனது ஆரம்ப நிலையான ‘பாலிப்’ (பிறப்பு) நிலைக்கு திரும்புகிறது. மீண்டும் புதிய ஜெல்லிமீனாக முதிர்ச்சி அடைகிறது. வேட்டையாடுதல் இல்லாவிட்டால், இந்த சுழற்சியை அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
News December 6, 2025
உக்ரைன் போருக்கு மன்னிப்பு கேட்ட புடினின் சீக்ரெட் மகள்

உக்ரைன் போரை நிறுத்தச்சொல்லி தந்தையிடம் சிபாரிசு செய்யும்படி புடினின் சீக்ரெட் மகளாக அறியப்படும் லூயிசா ரோசோவாவிடம் செய்தியாளர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு பதிலளித்த லூசியா, உக்ரைனில் நடக்கும் போருக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், போருக்கு தான் காரணமில்லை எனவும் போரை நிறுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
News December 6, 2025
எந்த அயோத்தியாக TN மாற வேண்டும்?: கனிமொழி

அயோத்தி போல <<18486296>> தமிழ்நாடு வருவதில் தவறில்லை <<>>என நயினார் தெரிவித்த கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். எந்த அயோத்தி போல TN மாற வேண்டும் என கேட்ட அவர், கடந்த தேர்தலில் RSS – பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா என கேள்வி எழுப்பியுள்ளார். கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


