News April 3, 2025
பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி

வரும் 6ஆம் தேதி தமிழகம் வரும் PM மோடியை இபிஎஸ் சந்தித்துப் பேசவுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இபிஎஸ்ஸை தொடர்ந்து அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாஜக முன்னணி தலைவர்களைச் சந்தித்து வரும் நிலையில், வரும் 6ஆம் தேதி புதிய பாம்பன் தூக்குப் பாலத்தை திறக்க வருகை தரும் PM மோடியை EPS சந்தித்துப் பேசவுள்ளார். அவரைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸும் PM மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
Similar News
News November 6, 2025
அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகலா?

EPS தரப்பிலிருந்து ஒரு சிலர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக செங்கோட்டையன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். யார் பேசுகிறார்கள் என்ற பெயர் விவரத்தை சொல்ல முடியாது; அது அவர்களுக்கு ஆபத்தாகிவிடும் எனவும் கூறியுள்ளார். இதனால், தற்போது EPS பக்கம் இருக்கும் சிலர், எந்த நேரத்திலும் செங்கோட்டையன் பக்கம் செல்லலாம் என்று கூறப்படுகிறது. இதனால், கட்சியினர் செயல்பட்டை இபிஎஸ் தீவிரமாக கண்காணிக்க இருக்கிறாராம்.
News November 6, 2025
டெல்லியிடம் ராமதாஸ் வைக்கும் டிமாண்ட்?

பாமகவில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை எழுந்துள்ளது. அப்போது, எந்தப் பக்கம் கூட்டணி சென்றாலும் 20 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு ஒப்புக்கொண்டு அதை எழுத்துப்பூர்வமாக எழுதி தரணும் என ராமதாஸ் கண்டிஷன் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்போதைய நிலவரப்படி டெல்லிக்கு பச்சை சிக்னல் காட்டியிருக்கும் ராமதாஸ் தரப்பு, அதுதொடர்பான பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக உள்ளதாக தைலாபுர வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
News November 6, 2025
டிரம்ப்பின் வரிக்கு எதிராக தொடங்கிய USA SC விசாரணை

USA அதிபர் டிரம்ப், சீனா உள்ளிட்ட பல நாடுகள் மீது விதித்த அதிகப்படியான சுங்க வரிகள் சட்டப்படி சரியா என்ற வழக்கை USA சுப்ரீம் கோர்ட் நேற்று விசாரிக்க தொடங்கியது. அதிகளவில் வரி விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை எனவும், USA நாடாளுமன்றமான Congress-க்கு மட்டுமே உள்ளது என்றும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது, USA வர்த்தக கொள்கையில் அதிபர் மற்றும் Congress-ன் அதிகார சமநிலையை மாற்றும் என கூறப்படுகிறது.


