News March 19, 2024
பாஜக அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழக மக்களை பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், பிரிவினைவாதப் பேச்சுகளை இனிமேல் யாரும் பேசாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக பெங்களூரு குண்டு வெடிப்புக்கு தமிழர்களே காரணம் என ஷோபா பேசியிருந்தார்.
Similar News
News November 28, 2025
உங்க குழந்தைகள் அதிகம் போன் பார்க்கிறார்களா?

குழந்தைகள் தற்போது ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துகின்றனர். தூங்காமல் கூட ரீல்ஸ் பார்க்கின்றனர். இது அவர்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும், பார்வை பாதிப்பு, மனநிலை மாற்றம், நரம்பியல் பிரச்னைகளும் ஏற்படலாம். இதனை தடுக்க, 6-12 வயது பிள்ளைகள் குறைந்தது 9 மணி நேரம் தூங்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த முக்கிய தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 28, 2025
நாளை 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

டிட்வா புயல் எதிரொலியாக நாளை (நவ.28) நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விழுப்புரம், திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் லீவு விடப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், டிச.3-ம் தேதி கார்த்திகை மகா தீபத்தையொட்டி தி.மலைக்கு உள்ளூர் விடுமுறையாகும்.
News November 28, 2025
கசப்பு தான், ஆனாலும் இது அவ்வளவு நல்லது!

பாகற்காய் கசப்பாக இருப்பதால் பெரும்பாலானோர் அதை சாப்பிட மாட்டார்கள். ஆனால் பாகற்காய் ஜூஸை வாரத்திற்கு இருமுறை குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் டாக்டர்கள். *உடலின் ஆற்றலை மேம்படுத்தும் *வலிமையை அதிகரிக்கும் *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் *செரிமானத்திற்கு நல்லது *மலச்சிக்கல் சரியாகும் *வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும். *ஆஸ்துமாவை தடுக்க உதவும்.


