News March 6, 2025
செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளில் ED ரெய்டு

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் 3 பேரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கேரளாவைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 10–க்கும் மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரும் ஒப்பந்ததாரருமான எம்.சி.சங்கர், கொங்கு மெஸ் சுப்பிரமணி, சக்தி மெஸ் கார்த்தி உள்ளிட்டோரின் வீடுகளில் காலை முதல் இந்த சோதனை நடந்து வருகிறது.
Similar News
News November 27, 2025
EPS மீது பாஜக மேலிடம் அதிருப்தியா?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்தால் NDA கூட்டணிக்கு பலம் அதிகரிக்கும் என பாஜக தலைமை நினைத்தது. இதனால் 0PS, டிடிவி தினகரன் போன்றவர்களை இணைக்க பாஜக முயற்சி எடுத்த போது, EPS பிடிவாதமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்துவிட்டதால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் பலம் சரியும் என கணிக்கப்படுகிறது. இது EPS மீது பாஜக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
News November 27, 2025
புயல் எச்சரிக்கை: 10 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

‘டிட்வா’ புயல் எதிரொலியாக நாளை (நவ.28) திருவாரூர், நாகை, தஞ்சை, புதுகைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல்லில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காலையில் மழை அளவை பொறுத்து அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம். இல்லையெனில், பள்ளி செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
News November 27, 2025
சீமான் மீது டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து

சீமானின் தூண்டுதலின் பேரில் தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் நாதகவினர் அவதூறு கருத்து பதிவிட்டு வருவதாக டிஐஜி வருண் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி சீமான் மதுரை HC-ல் மனு தாக்கல் செய்தார். ஏற்கெனவே சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்திருந்த நிலையில், இப்போது நீதிபதி அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.


