News April 10, 2024
நவம்பரில் ED ரெய்டு, ஏப்ரலில் ராஜினாமா

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இன்று மாலை ராஜினாமா செய்தார். விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரெய்டுக்கு பயந்து அவர் பாஜக பக்கம் சாய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.
Similar News
News November 12, 2025
டிச.17-ல் பாமக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்

வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 17-ம் தேதி பாமக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான பாமகவினர் கைதாக வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தற்போது வரை பாமகவிற்கும், ராமதாஸுக்கும் உண்மையாக உழைத்து வருவதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
News November 12, 2025
IPPB-ல் 309 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 309 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் அசோசியேட், அசிஸ்டண்ட் மேனேஜர் ஆகிய பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் 3 ஆண்டு பணி அனுபவம் தேவை. இதற்கு, வரும் டிச.1-ம் தேதிக்குள் https://ippbonline.bank.in/ தளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 12, 2025
1 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு பசும்பால் கொடுக்கலாமா?

1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக் கூடாது. பசும்பாலில் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் இ, சி, இரும்புச்சத்து, ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவு இருக்காது. பசும்பாலின் கொழுப்பை செரிக்கும் அளவுக்கு குழந்தைகளின் செரிமான அமைப்பு இல்லை. எனவே முடிந்தவரை இதனை தவிருங்கள் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அனைவருக்கு இதை பகிருங்கள்.


