News March 19, 2025
193 பேர் மீது ED வழக்கு: 2 பேருக்கு மட்டுமே தண்டனை!

கடந்த 10 ஆண்டுகளில் 193 அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ரஹீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, பதிவு செய்யப்பட்ட 193 வழக்குகளில் இரண்டில் மட்டுமே தண்டனை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், மற்ற வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
BREAKING: விஜய் முக்கிய அறிவிப்பு

நாகையில் நாளை விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கும் நிலையில், தொண்டர்களுக்கு தவெக தலைமை பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. *சாலையில் அனுமதியின்றி பேனர் வைக்க வேண்டாம். *கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள், முதியவர்கள், சிறாரை கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டாம். * விஜய் வாகனத்தை பின் தொடர வேண்டாம். *விஜய் வருகையின்போது பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும். *சட்டம் – ஒழுங்கை மீறாமல் கண்ணியமாக நடக்க வேண்டும்.
News September 19, 2025
ஆயுதபூஜை விடுமுறை.. செப்.22 முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – குமரி இடையே செப்.22, 29, அக்.6, 13-லிலும், மறுமார்க்கத்தில் செப்.23, 30, அக்.7, 14, 21-லிலும் இயக்கப்படும். அதேபோல், நெல்லை – செங்கல்பட்டு இடையே, செப்.26, 28, அக்.3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும், மறுமார்க்கத்தில் செப்.26, 28, அக். 3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. SHARE.
News September 19, 2025
ரோபோ சங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரோபோ சங்கர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் ‘அம்பி’ படத்தில் மட்டுமே ஹீரோவாக நடித்துள்ளார். டப்பிங் கலைஞர், பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு விருந்தினர் உள்ளிட்டவற்றின் மூலம் அவருக்கு சுமார் ₹5 – ₹6 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக ‘ஏசியாநெட்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ரோபோ சங்கரை போலவே அவரது மனைவி பிரியங்கா மற்றும் மகள் இந்திரஜாவும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.