News December 8, 2025
ED கடிதம் கிடைத்தது எப்படி? CBCID-க்கு மாற்றிய TN அரசு

நகராட்சி நிர்வாக துறையில் அரசுப் பணி வழங்கியதில் ₹250 கோடி முறைகேடு நடந்துள்ளது பற்றி தமிழக டிஜிபி வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என ED கடிதம் எழுதியதாக மதுரையைச் சேர்ந்த ஒருவர் HC அமர்வில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த HC, ED எழுதியதாக கூறப்படும் கடிதம் எப்படி மனுதாரருக்கு கிடைத்தது என கேள்வி எழுப்பியது. இதனை போலீஸ் விசாரித்து வந்த நிலையில், விசாரணை CBCID-க்கு மாற்றப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்: EPS

அதிமுக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக EPS தெரிவித்துள்ளார். மேலும் அவர், சசிகலாவின் கட்சி அதிமுக கூட்டணிக்கு வருவது குறித்து அமித்ஷாவுடன் ஆலோசிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் தற்போதைய அரசியல் சூழல், தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
News March 3, 2026
‘கூட்டணியிலிருந்து விலகுங்கள்’.. மதிமுகவில் குமுறல்

2021-ல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4-ல் வெற்றிபெற்றது. இம்முறை ECI-ன் அங்கீகாரத்தை மீண்டும் பெற 12 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், தனி சின்னம் கோரிக்கைகளை வைகோ முன்வைத்ததாக தெரிகிறது. ஆனால், உதயசூரியன் என்றால் 4, தனி சின்னம் என்றால் 3 தொகுதிகள் என திமுக சொல்லிவிட்டதாம். இதை ஏற்க முடியாத <<19223088>>மதிமுக <<>>தொண்டர்கள் சிலர், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுங்கள் என வைகோவிடம் கூறியுள்ளார்களாம்.
News March 3, 2026
மார்ச் 6-ல் அதிமுக தொகுதிப்பங்கீடு அறிவிப்பா?

யாருக்கு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்குவது, தொகுதிப்பங்கீடு உள்ளிட்டவை குறித்து நாளை அதிமுக மா.செ.க்களின் கருத்துகளை EPS கேட்கவிருக்கிறார். ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5-ம் தேதியுடன் முடியும் நிலையில், யாருக்கு MP பதவி வழங்குவது என 4-ம் தேதி அறிவிக்கவிருப்பதாகவும், மார்ச் 6-ம் தேதி தொகுதிப்பங்கீட்டு பட்டியல் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


