News February 2, 2025
ECR சம்பவம்: கைதான சந்துரு வாக்குமூலம்

கொடைக்கானல் செல்லும்போது சுங்கச்சாவடியை எளிதில் கடந்து செல்லவே காரில் திமுக கொடியை பொருத்தினோம் என ஈசிஆர் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், “என் நண்பன் சந்தோஷ் கூறியதால்தான் அந்த பெண்களின் காரைத் துரத்தி சென்றோம். பின், தவறான காரை துரத்திவிட்டோம் என உணர்ந்து மன்னிப்பு கேட்டோம். சம்பவத்தின்போது நாங்கள் யாரும் மதுபோதையில் இல்லை” என்றார்.
Similar News
News March 2, 2026
சென்னை: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 2, 2026
சென்னையில் ‘சைலண்ட்’ ஆக வேலை செய்யும் சீமான்

நாம் தமிழர் கட்சி இந்த முறை சென்னையில் உள்ள மீனவப் பகுதிகள் மற்றும் குடிசை மாற்று வாரியப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. “கடலோரத் தொகுதி”களில் தங்கள் வாக்குகளை அதிகரிக்க அவர்கள் எடுத்து வரும் மௌனப் புரட்சி, பெரிய கட்சிகளுக்குச் சவாலாக அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சீமானின் இந்த முயற்சி கைகொடுக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News March 2, 2026
சென்னை: தண்ணீரில் தலையை முக்கி கொலை!

கொளத்தூரை சேர்ந்த பிரதீப்(35)- லியா(28) தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மனைவி நடத்தையில் கொண்ட சந்தேகத்தால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் லியா தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது 2 மகள்களுடன் மாமல்லபுரம் சென்ற பிரதீப் விடுதியில் 2 மகள்களை தண்ணீரில் தலையை முக்கி கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.சிகிச்சையில் இருந்து குணமானதால் அவர் கைது செய்யப்பட்டார்.


