News March 24, 2025
அனைத்துக்கட்சிகளுடன் EC இன்று ஆலோசனை

TNல் தேர்தல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக, அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், ஒரே நபர் 2 வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பது, இறந்தவர்களின் பெயர் நீக்காதது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட 14 கட்சிகள் பங்கேற்கின்றன.
Similar News
News March 26, 2025
குழந்தைகளுக்கு பாதாம் பிசின் கொடுக்கலாமா?

கோடைக்காலத்தில் சர்பத், ஜூஸ் போன்றவற்றில் ஊற வைத்த பாதாம் பிசினை சேர்த்துக் குடிப்பதால் உடல் குளிர்ச்சியடையும். வடமாநிலங்களில் பிரசவமான பெண்களுக்கு கோந்து லட்டு கொடுப்பது வழக்கம். இது பெண்களின் உடல் வலிமைக்கும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை எந்த வயதினரும் எடுத்து கொள்ளலாம். ஆனால் அடிக்கடி சளி, வீஸிங் பிரச்னைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு பாதாம் பிசினை கொடுப்பதை தவிர்க்கலாம்.
News March 26, 2025
பெயரை கேட்டாலே திமுகவுக்கு பயம்: தினகரன்

தமிழக அரசியலில் அண்ணாமலை நெருப்பாக செயல்பட்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இப்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், அண்ணாமலை எதிரிகளுக்கு அக்னியாக இருந்தாலும், பொதுமக்களுக்கும், நண்பர்களுக்கும் அண்ணாமலையார் தீபம் போன்று இருப்பதாகவும் பாராட்டியுள்ளார். அண்ணாமலை பெயரை சொன்னாலே திமுக நடுங்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 26, 2025
எப்போது தேர்தல் நடந்தாலும் மோடியே பிரதமர்: ஓபிஎஸ்

இந்திய நாட்டின் புகழை பிரதமர் மோடி உலக அளவில் கொண்டு சென்றுள்ளதாக ஓபிஎஸ் பாராட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது ஆட்சி திறன் காரணமாக இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எடுத்து சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எத்தனை முறை தேர்தல் வந்தாலும், பிரதமராக மோடியே வருவார் என்றும் தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.