News October 30, 2025
உள்நோக்கத்துடன் EC செயல்படுகிறது: ஆர்.எஸ்.பாரதி

TN-ல் SIR பணிகளை உள்நோக்கத்துடன் EC செயல்படுத்துவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் திருட்டுத்தனமாக நீக்கப்பட்டதாகவும், அதுபோல TN-ல் செய்வார்களோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார். EC அறிவித்த அட்டவணையில் கிறிஸ்துமஸ், பொங்கல் விடுமுறையை தவிர்த்து மீதமுள்ள நாள்களில் 6.19 கோடி வாக்காளர்களிடம் SIR பணிகளை முடிக்க இயலுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News October 30, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 30, ஐப்பசி 13 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 130 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை
News October 30, 2025
மியான்மர் அகதிகளுக்கு அச்சுறுத்தலா? இந்தியா மறுப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இச்சம்பவத்தில் இந்தியாவில் உள்ள மியான்மர் மக்கள் அதிகாரிகளால் அச்சுறுத்தபட்டதாக, ஐநாவின் 3-வது குழு குற்றஞ்சாட்டியது. இதனை இந்தியா மறுத்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று MP திலீப் சைகியா ஐநாவில் தெரிவித்துள்ளார். மியான்மருக்கு இந்தியா செய்த உதவிகளையும், இணக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
News October 30, 2025
PCB-யிடம் முரண்டு பிடிக்கும் ரிஸ்வான்

ODI கேப்டன் பொறுப்பிலிருந்த நீக்கப்பட்ட பாக்., வீரர் முகமது ரிஸ்வான், தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணியிலும் இடம்பெறவில்லை. இந்நிலையில், பாக்., கிரிக்கெட் வாரியத்தின் (PCB) மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரிஸ்வான் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் & டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான விளக்கத்தை PCB-யிடம் அவர் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


