News April 23, 2025
அப்பளம் அதிகம் சாப்பிட்டால் ஆபத்து!

வீட்டின் மாடியில் அரிசி வத்தல், ஜவ்வரிசி வத்தல் காயப்போடுவது வழக்கொழிந்துவிட்டது. அதற்கு மாற்றாக ரெடிமேட் அப்பளங்களே இப்போது வீட்டில் அதிகம் பொரிக்கப்படுகின்றன. இதனை அதிகம் உணவில் சேர்ப்பது ஆபத்து என்கின்றனர் டாக்டர்கள். காரணம் இதில் இருக்கும் சோடியம் பென்சோயேட். இது உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் வருவதற்கு வழிவகுக்குமாம். சோ, ரெடிமேட் அப்பளங்களை அளவாக பயன்படுத்துங்கள்.
Similar News
News November 9, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

ஆசையாக அப்பாவை சந்திக்க சொந்த ஊருக்கு சென்ற சின்னத்திரை நடிகர் பேரரசு(21), கடலூர், ஆண்டிக்குப்பம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் உயிரிழந்தார். இவர், ‘உப்பு புளி காரம்’ வெப் சீரிஸ் மூலம் பிரபலமானதோடு, உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து வந்தார். வளர்ந்து வந்த இளம் நடிகரை இழந்துவிட்டோம் அவருடன் ‘உப்பு புளி காரம்’ தொடரில் நடித்த சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News November 9, 2025
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் புது அப்டேட்!

நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்தின் டைட்டில் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு, தமன் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
News November 9, 2025
மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம்

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க தினமும் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடும்படி டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த பழத்தில் பொட்டாசியம் & மெக்னீசியம் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறதாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.


