News October 24, 2025
இந்த பழங்கள் சாப்பிட்டால் சளி கிட்டவே நெருங்காது!

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே நம்மை முதலில் வாட்டி வதைப்பது சளிதான். இதை தடுக்க சில பழங்களை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி அண்டவே அண்டாது. ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்டவை சளி உங்களை நெருங்காமல் பார்த்துக்கொள்ளும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதேபோல் மழைகாலத்தில் நாம் தவிர்க்கும் ஆரஞ்சு, தர்பூசணி உள்ளிட்டவையும் சளி பிடிக்காமல் தடுக்க உதவுமாம்.
Similar News
News October 24, 2025
BREAKING: சற்றுநேரத்தில் கூட்டணியை அறிவிக்கிறார்

தமிழக முன்னேற்ற கழகம் (TMK) என்ற புதிய கட்சி இன்று உதயமாகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் யாதவ மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் செங்கம் கு.ராஜாராம், தனது ஆதரவாளர்களுடன் TMK கட்சியை சற்றுநேரத்தில் தொடங்குகிறார். கட்சியின் கொடியை அறிமுகம் செய்யும் அவர், 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்தும் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 24, 2025
பிஹார்: 10 தொகுதிகளில் மோதும் காங்.,- RJD

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. கடைசியில், தேஜஸ்வி யாதவ் CM வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், RJD-க்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் மற்றும் VIP கட்சிகளின் 4 வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றனர். இதனிடையே, 10 தொகுதிகளில் மனுவை வாபஸ் பெறாததால் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
News October 24, 2025
டெஸ்டில் இருந்து விலகியது ஏன்? ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம்

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியது ஏன் என்பதற்கு இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார். தனக்கு முதுகுப் பிரச்சினை இருப்பதை தெரிவித்த அவர், அதன் காரணமாக தன்னால் தொடர்ந்து 2 நாள்கள் பீல்டிங் செய்ய முடிவதில்லை என கூறினார். இதனாலேயே டெஸ்டில் ஓய்வு எடுத்துள்ளதாக கூறிய அவர், ஆனால் ODI-ல் ஒரு நாள் பீல்டிங் செய்த பிறகு, மீண்டுவர நேரம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.


