News August 13, 2025

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

image

இந்தோனேசியாவின் மேற்கு பபுவா பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நேற்று மாலை 1:54 மணிக்கு, நிலத்தின் அடியில் 39 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 7-ம் தேதி இந்தோனேசியாவில் 4.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Similar News

News August 13, 2025

சிம்ம முகத்துடன் காட்சி தரும் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி!

image

கும்பகோணம் அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி சிம்ம முகம், 18 கரத்துடன் காணப்படுகிறாள். கவுரவர்களிடம் தோற்று காட்டுக்கு சென்ற பஞ்ச பாண்டவர்கள் நாட்டை மீட்க, இங்கு வந்து யாகம் வளர்த்து பிரத்யங்கிரா தேவியை வழிபட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இன்றளவும் அமாவாசை தோறும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டால் மன தைரியம் கிடைக்கும். SHARE IT.

News August 13, 2025

கைதுக்கு முன்பே திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பொன்வசந்த்

image

சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மேயர் இந்திராணியின் கணவரும், திமுகவின் முக்கிய முகமாக இருந்தவருமான பொன்வசந்த் நேற்று கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, திமுக ஆட்சியில் ஊழல் நடப்பதற்கு இதுவே சான்று என்று அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், பொன்வசந்த் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவுடன், கைது நடவடிக்கைக்கு முன்னரே, அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக திமுகவினர் பதிலளித்து வருகின்றனர்.

News August 13, 2025

ED விசாரணை வளையத்தில் சுரேஷ் ரெய்னா

image

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. 1XBet என்ற சூதாட்ட செயலி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் ED, அதில் சுரேஷ் ரெய்னாவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க உள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள ED அலுவலகத்தில் இன்று ரெய்னா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.

error: Content is protected !!