News April 23, 2025

e-NAM வேளாண் சந்தை திட்டம்: இனி ஆதார் கட்டாயம்

image

e-NAM வேளாண் சந்தை திட்டப் பயன்களை பெற ஆதாரை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள், வேளாண் தயாரிப்பு அமைப்புகளுக்கு மண்டி அமைக்க ரூ.75 லட்சம் வரை அரசு வழங்குகிறது. இதில் வெளிப்படைத்தன்மை, உரியவர்கள் பயன் அடைவதை உறுதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆதாரை அளிக்க வேண்டும், ஆதார் இல்லாதோர் அதற்கு நிச்சயம் பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News April 26, 2025

அதிகமாக டீ, காபி குடிப்பீங்களா… கவனியுங்க!

image

‘லைட்டா தலை வலிக்குது.. வா டீ குடிப்போம்’ என சொல்லாத ஆட்களே கம்மிதான். ஒரு நாளைக்கு 3-5 கப் டீ அல்லது காபி குடிப்பது ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், ஒரு அபாய எச்சரிக்கையும் கொடுக்கிறார்கள். அதாவது, ஒரு நாளைக்கு 400 மி.கி. அளவுக்கு அதிகமாக caffeine எடுத்துக்கொண்டால், அது நாளடைவில் அமைதியின்மை, தூக்கமின்மையை அதிகரிக்குமாம். நீங்க டெய்லி எத்தனை கப் குடிப்பீங்க?

News April 26, 2025

மாதம் ரூ.1,000 உதவித் தாெகை பெறும் 9.19 லட்சம் மாணவர்கள்

image

அரசு பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்விகளில் சேரும் மாணவிகளுக்காக புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதன்கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதில் எத்தனை மாணவிகள், மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்ற விவரத்தை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் 4,93,689 மாணவிகள், 4,25,346 மாணவர்கள் பயனடைவதாக கூறப்பட்டுள்ளது.

News April 26, 2025

தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் ஜான்வி கபூர்

image

பாலிவுட் சினிமாவை கலக்கி வரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் விரைவில் கோலிவுட் சினிமாவிலும் அடியெடுத்து வைக்கவுள்ளார். அட்டகத்தி தினேஷை ஹீரோவாக வைத்து பா. ரஞ்சித் இயக்கி வரும் புதிய படத்தில் ஜான்வி கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜான்வியை விரைவில் தமிழ் சினிமாவில் பார்க்கலாம்.

error: Content is protected !!