News October 10, 2024

துர்காஷ்டமி: எப்படி வழிபட வேண்டும்?

image

அம்பிகைக்குரிய நவராத்திரியின் 8ஆவது நாளான அஷ்டமி தினத்தை ‘துர்காஷ்டமி’ என புராணம் கூறுகிறது. சண்டன்-முண்டன் அசுரர்களை அழித்த சிறப்பு வாய்ந்த இந்த நன்னாளில் காலையிலேயே குளித்து, விரதமிருந்து, ராகு காலத்தில் பட்டீஸ்வரம் கோயிலுக்குச் சென்று துர்க்கைக்கு வெண் தாமரை மலர் மாலை சாற்றி, தேவி அஷ்டக துதியைப் பாடி, எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டால் தீய சக்திகளால் உண்டான தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

Similar News

News August 11, 2025

உக்ரைனில் அமைதி திரும்ப உதவுவதாக PM மோடி உறுதி

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி PM மோடியுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ரஷ்யா – உக்ரைன் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளங்கியதாகவும், இரு நாடுகளிடையே அமைதி ஏற்பட அனைத்து உதவிகளையும் செய்வேன் எனவும் உறுதி அளித்ததாக PM மோடி தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். புதின் இந்தியா வரவுள்ள நிலையில், ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதை குறைக்க ஜெலன்ஸ்கி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

News August 11, 2025

கனமழை வெளுக்கும்.. கவனமா இருங்க மக்களே!

image

சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தஞ்சை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை சென்னை, செ.பட்டு, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால், இரவில் வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே!

News August 11, 2025

தோனி வாக்குமூலம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

image

₹100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞரை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. IPL சூதாட்ட வழக்கு தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்து கூறியதாக IPS அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியாவுக்கு எதிராக 2014-ல் தோனி வழக்கு தொடர்ந்திருந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், நீதிபதி CV கார்த்திகேயன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!