News April 15, 2025
அன்புமணிக்கு அட்வைஸ் கொடுத்த துரை வைகோ

பாமகவில் உட்கட்சி மோதல் எழுந்துள்ள நிலையில், அன்புமணிக்கு துரை வைகோ அட்வைஸ் செய்துள்ளார். ராமதாஸின் அரசியல் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. அதை அன்புமணி புரிந்துக் கொண்டு செயல்பட வேண்டும். அவர்களுக்குள் இருக்கக்கூடிய பிரச்னையை கட்சிக்குள்ளேயே பேசி தீர்க்க வேண்டும். அதுதான் அக்கட்சிக்கும் நல்லது. அதே சமயம் தலைமைக்கு துரோகம் செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Similar News
News November 19, 2025
நாட்டிற்கு எதிராக இருந்தால் ஏற்க மாட்டோம்: பியூஷ் கோயல்

அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இருதரப்புக்கும் பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே இறுதி அறிவிப்பு வெளிவரும். நம் நாட்டின் பொருளாதார முன்னுரிமைகளுக்கு எதிராக இருந்தால், அந்த ஒப்பந்தத்தில் நிச்சயம் இந்தியா கையெழுத்திடாது. மீனவர்கள், சிறுதொழில்களின் நலன்கள் உறுதிபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 19, 2025
Business Roundup: UPI-ல் தனியார் வங்கிகள் கடன் சேவை

*இ-காமர்ஸ் ஏற்றுமதியாளர்களுக்கு பிரத்யேக கிரெடிட் கார்டு வழங்கப்பட உள்ளது. *இந்தியாவின் விமான சரக்கு ஏற்றுமதி அதிகரிப்பு. *UPI வாயிலாக தனியார் வங்கிகள் கடன் வழங்கும் சேவையை தொடங்க உள்ளன. *கடந்த ஜூலை – செப்டம்பர் வரை, 10.39 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனை. *சர்க்கரை குறைந்தபட்ச விற்பனை விலையை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை. *அமெரிக்காவிற்கான இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 8.58% சரிவை கண்டுள்ளது.
News November 19, 2025
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஊதியம் உயர்வு

தமிழகத்தில் SIR பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், BLO-க்களுக்கான ஊதியத்தை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ₹1,000-லிருந்து ₹2,000-ஆகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் ₹6,000-லிருந்து ₹12,000-ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ₹12,000-லிருந்து ₹18,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


