News April 9, 2025
சென்னை ஏர்போர்ட்டில் ₹6.31கோடி போதைப்பொருள்

சென்னை விமான நிலையத்தில் ₹6.31 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த கென்யா நாட்டு பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை சோதித்த போது அப்பெண் சிக்கியுள்ளார். அவரது வயிற்றில் இருந்து 90 மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்தல் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 17, 2025
அட்சய திரிதியை: 5 ராசிக்காரர்களுக்கு பணமழை

அட்சய திரிதியையில் 5 ராசியினருக்கு பணமழை கொட்டும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். கடக ராசியினருக்கு வெற்றி, விரும்பிய வேலை கிடைக்கும். தங்கம், வெள்ளி சேரும். மகர ராசியினருக்கு, லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் மூலம் புதிய வருமானம் கிடைக்கும். கும்ப ராசியினர் வியாபாரம், தொழிலில் லாபம் பெறுவர். ரிஷப ராசியினருக்கு வங்கியில் சேமிப்பு உயரும். துலாம் ராசியினர் புதிய சொத்துகள் வாங்குவர்.
News April 17, 2025
21 ஏக்கர் நிலம் வெறும் 99 பைசாவிற்கு!

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள 21.16 ஏக்கர் நிலத்தை, TCS நிறுவனத்திற்கு 99 பைசாவிற்கு ஒதுக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு மாநிலத்திற்கு ₹1,370 கோடி முதலீட்டைக் கொண்டு வரும் எனவும், மேலும் 12,000 வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலத்தில் TCS நிறுவனம் புதிய IT வளாகத்தை அமைக்க உள்ளது.
News April 17, 2025
பங்குச்சந்தை: அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்கள் இவைதான்

இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,509 புள்ளிகள் உயர்ந்து 78,553 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50, 414.45 புள்ளிகள் உயர்ந்து 23,852 புள்ளிகளில் நிறைவு செய்தது. ஐடி பங்குகள் சரிவை சந்தித்தாலும், வங்கி, நிதிச்சேவை பங்குகள் ஏற்றம் கண்டன. ஜொமாட்டோ, சன் பார்மா, ICICI, ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்டவை அதிக லாபம் ஈட்டின.