News April 24, 2024
போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போதைக்கும்பல் காவலர்களைத் தாக்கிய சம்பவத்தை மேற்கோள் காட்டி, போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்காவிட்டால் இளைஞர்களின் எதிர்காலத்தை அது நாசமாக்கும் என்று எச்சரித்தார். மேலும், தமிழகத்தில் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டியது திமுக அரசின் கடமை என்றும் கூறினார்.
Similar News
News January 15, 2026
குமரி: இன்சூரன்ஸ் ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை

ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்தவர் தோமஸ் (58). தனியார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நேற்று (ஜன.14) போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 15, 2026
அரசியல் தலைவர்களின் பொங்கல் வாழ்த்துகள் (PHOTOS)

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், உழைப்புக்கும் இயற்கைக்கும் நன்றி கூறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவற்றை தெரிந்துகொள்ள மேலே உள்ள புகைப்படங்களை வலதுபுறம் SWIPE செய்யுங்கள். உங்கள் பொங்கல் வாழ்த்தை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.
News January 15, 2026
BREAKING: பொங்கல் நாளில் விஜய் அறிவித்தார்

உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய். ஏற்கெனவே, தமிழ்ப் புத்தாண்டு தை மாதமா, சித்திரை மாதமா என்ற சர்ச்சை இருந்து வரும் நிலையில், தன்னுடைய இந்த வாழ்த்தில் தமிழ்ப் புத்தாண்டு என அவர் பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இவ்வளவு நாள் ’ஜனநாயகன்’ பற்றி எதுவும் பேசாமல் இருந்த விஜய்யிடமிருந்து இந்த ட்வீட் வந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.


