News February 28, 2025

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு: கவர்னர்

image

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் கைவிடப்பட்ட கொள்ளைப்புறம் போல் கண்டுகொள்ளப்படாமல் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். தென்மாவட்ட தொழில்முனைவோர், கல்வியாளர்களுடன் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், தொழில்துறைக்கான வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும் மக்களுக்கு அது தரப்படவில்லை என சாடினார். தென்மாவட்ட இளைஞர்களிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்திருப்பதும் கவலையளிக்கிறது என்று கூறினார்.

Similar News

News February 28, 2025

ரூ.50,000 கல்வி உதவித் தொகை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்க்கையை மேம்படுத்துவதற்காக AICTE சார்பில் தகுதியுடைய மாணவர்களுக்கு ‘யசஸ்வி’ திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் வங்கிக்கணக்கில் ரூ.50,000, ‘சரஸ்வதி’ திட்டத்தின்கீழ் ரூ.25,000 செலுத்தப்படுகிறது. இந்த 2 உதவித் தொகைக்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆதலால் https://scholarships.gov.in இணையதளத்தில் இன்றே விண்ணப்பிங்க. இந்தத் தகவல்களை நண்பர்களுக்கும் பகிருங்க.

News February 28, 2025

ஒரு மாதத்தில் ₹20 லட்சத்தை இழந்த பிட்காயின்

image

சர்வதேச சந்தையில் பிட்காயினின் மதிப்பு மளமளவென சரிந்து வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் கிடுகிடுவென உயர்ந்த பிட்காயினின் மதிப்பு, ஜனவரி 30ஆம் தேதி ₹90 லட்சத்திற்கு மேல் இருந்தது. அது, கடந்த ஒரு வாரத்தில் கடுமையாக சரிந்து, தற்போது ₹69 லட்சத்திற்கு வர்த்தகம் ஆகிறது. இதனால், சமீபத்தில் அதில் முதலீடு செய்தவர்கள் பெரிய தொகையை இழந்து நஷ்டம் அடைந்துள்ளனர்.

News February 28, 2025

மனைவி டார்ச்சரால் TCS மேனேஜர் தற்கொலை?

image

மனைவியின் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு, ஆக்ராவைச் சேர்ந்த TCS மேனேஜர் மானவ் ஷர்மா (25) தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதலனுடன் வாழ, தன் மீது பொய் குற்றச்சாட்டுக்களை மனைவி நிகிதா கூறியதாக அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆனால், மதுப்பழக்கத்திற்கு அடிமையான மானவ், இதற்கு முன்பும் பல முறை தற்கொலைக்கு முயன்றதாக நிகிதா குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.

error: Content is protected !!