News March 29, 2024
கிட்னியை காக்கும் சிறுகண்பீளை குடிநீர்

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கிட்னியை தூய்மைப்படுத்த சிறுகண்பீளை குடிநீர் பருகலாம் என்று சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். கைப்பிடி அளவு சிறுகண்பீளை செடியை வேருடன் எடுத்து, சுத்தம் செய்து 2 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சி நீராக பருகலாம். இந்த குடிநீரை 7 நாள்கள் குடித்தால் போதும், ரத்தம் சுத்தமாவதுடன் கிட்னியில் உள்ள பி.எச், உப்பு, நச்சுகள் அனைத்தும் வெளியேறிவிடுமாம்.
Similar News
News November 21, 2025
ஈரோடு: குடும்ப சண்டையில் நடந்த விபரீதம்!

பர்கூர் மலைப்பகுதி ஒந்தனை மலை கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த மகேஷ். இவருக்கும் இவரது கணவருக்கும் குடும்பத் தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு மகேஷ் விஷம் அருந்தியுள்ளார். அப்பொழுது அவரது கணவர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் ஏற்கனவே மகேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News November 21, 2025
கஸ்டமர்களை ஏமாற்றியதால் செக்!

ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்யும் போது, முதலில் விலை குறைவாக இருக்கும். ஆனால், பில்லிங்கின் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை பலரும் எதிர்கொண்டிருப்போம். இப்படி கஸ்டமர்களை ஏமாற்றுவதை ‘டார்க் பேட்டர்ன்’ மூலம் இ- காமர்ஸ் நிறுவனங்கள் செய்துவந்தன. இதற்கு மத்திய அரசு கடிவாளம் போட்ட நிலையில் Swiggy, Zomato உள்ளிட்ட 26 நிறுவனங்கள், டார்க் பேட்டர்ன்களை நீக்கியுள்ளன.
News November 21, 2025
2-வது டெஸ்ட்: கேப்டன் சுப்மன் கில் விலகல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் சுப்மன் கில் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18331700>>கழுத்து வலிக்கு<<>> சிறப்பு சிகிச்சை பெற அவர் மும்பை சென்றுள்ளதாகவும், பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை தொடங்கும் கவுஹாத்தி டெஸ்டில் கேப்டனாக பண்ட் செயல்படுவார் என்றும், பேட்டிங் வரிசையில் கில்லுக்கு பதிலாக சாய் சுதர்ஷன் இடம்பெறுவார் எனவும் கூறப்படுகிறது.


