News October 8, 2025
இளமையான தோற்றத்தை பெற இந்த மூலிகை தேநீரை குடிங்க!

✱புதினா தேநீர் அருந்துவது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ✱புதினா இலைகளை வெயிலில் உலர்த்தி, அவற்றை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும் ✱இதை தேனுடன் கலந்து அருந்தினால், சரும பாதிப்புகள் வெகுவாக குறையும் ✱புதினாவின் மணமும் சுவையும், இதனை அருந்தும்போது நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ✱ முகச் சுருக்கங்கள் நீங்கி, இளமையான தோற்றம் கிடைக்கும். SHARE IT.
Similar News
News October 8, 2025
கூட்டணி கட்சிகளுக்கு அதிக சீட் வழங்கவுள்ளதா திமுக?

2026 தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக சீட் உள்ளிட்ட ஆஃபர்களை அள்ளிவீச திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவை கைகாட்டி திமுக தலைமைக்கு காங்கிரஸ் பிரஷரை ஏற்றி வருகிறதாம். கூட்டணி உடையக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் திமுக தலைமை, பிஹார் தேர்தல் முடிந்ததும், கூட்டணியை இறுதி செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்க தீவிரம் காட்டி வருகிறதாம்.
News October 8, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை ₹90 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹800 உயர்ந்து ₹90,400-க்கும், கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுவதுபோல், விரைவில் தங்கம் விலை ₹1 லட்சத்தை எட்டிவிடும் என தெரிகிறது.
News October 8, 2025
மூலிகை: பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤பெருங்காயப் பொடியை வறுத்து, வலி உள்ள சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி குறையும் ➤பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்சனை தீரும் ➤தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.