News September 30, 2025

சளி, இருமலுக்கு இந்த மூலிகை தேநீர் குடிங்க!

image

மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்ற தொல்லைகள் நீங்க, ஆடாதொடை டீ பருகுமாறு சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் *இந்த டீயை செய்ய, சில ஆடாதோடை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும் *3-5 நிமிடங்கள் கொதித்த பிறகு, வடிகட்டி, தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து பருகலாம். இது சளி, இருமல் போன்ற கப நோய்களைக் குணப்படுத்தும். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.

Similar News

News September 30, 2025

₹35,000 சம்பளம்: தமிழக அரசில் 1,096 பணியிடங்கள்

image

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகத்தில் காலியாகவுள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர், சிறப்பு கல்வியியலாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 1,096 பணியிடங்களை அறிவித்துள்ளது. கல்வித்தகுதி: 10th, டிகிரி. சம்பளம்: ₹12,000 – ₹35,000 வரை (பதவிகளுக்கேற்ப). விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.14. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க.

News September 30, 2025

முன் ஜாமீன் கோரும் N.ஆனந்த்

image

கரூர் பிரசார கூட்டத்தில் விதிமுறைகள் மீறியதாக தவெக நிர்வாகிகள் N.ஆனந்தும், CTR.நிர்மல் குமாரும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், இவர்கள் இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் காலை 10.30 மணிக்கு முன் ஜாமீன் கோரி மனு அளிக்கவுள்ளனர். ஏற்கெனவே போலீசாரால் கைது செய்யப்பட்ட மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரும் ஜாமீன் கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 30, 2025

டிரம்பின் போர் நிறுத்த திட்டத்தை வரவேற்கிறேன்: PM

image

டிரம்பின் பேச்சுவார்த்தைக்கு பின் இஸ்ரேல் PM நெதன்யாகு, போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் டிரம்பின், காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்பதாக PM மோடி பதிவிட்டுள்ளார். டிரம்பின் திட்டம் பாலஸ்தீன, இஸ்ரேலிய மக்களுக்கு நீண்டகால அமைதியை வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சியால் மோதல் முடிவுக்கு வந்து அமைதி நிலைநாட்டப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!