News March 24, 2025
ஒரு டம்ளர் மோர் குடிங்க..

✦கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சி நீங்கும். மோரில் வைட்டமின் பி2 இருப்பதால் கல்லீரல் நன்றாக செயல்பட வைக்கிறது. ✦மோருடன் இஞ்சி, சீரகம் சேர்த்து குடித்து வர வயிறு உப்புசம் நீங்கும். ✦மாதாவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, ரத்தப்போக்கை சமாளிக்க மோருடன் வெந்தயம் சேர்த்து குடிக்கலாம். ✦உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது.
Similar News
News November 27, 2025
தி.மலை: பெண்ணின் சேலையில் பற்றி எரிந்த தீ!

அண்ணாமலையார் கோயிலுக்கு வெளியே கற்பூரம் ஏற்றும் இடத்தில் நேற்று(நவ.26) பெண் ஒருவரின் சேலையில் திடீரென தீப்பற்றி சிறிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, அவர் சிறுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News November 27, 2025
சனி தொல்லையை நீக்கும் வெற்றிலை பரிகாரம்!

சனீஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட வெற்றிலை வழிபாடு உதவும். ஒரு தட்டில் 2 வெற்றிலை, 3 பாக்குகள், 11 நாணயங்களை வைக்கவும். அதன் முன், நெய்யில் தீபம் ஏற்றி வையுங்கள். இயன்ற ஒரு பொருளை நெய்வேத்தியமாக படைக்கவும். வடக்கு திசை பார்த்தவாறு ‘ஸ்ரீ சொர்ண ஆகர்சன பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இந்த பரிகாரத்தை வளர்பிறை அஷ்டமியில் செய்வது கூடுதல் பலனை கொடுக்கும். SHARE IT.
News November 27, 2025
BREAKING: தமிழ்நாட்டை நோக்கி வரும் புதிய புயல்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக IMD தெரிவித்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கும். இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‘டிட்வா’ என பெயரிடப்படும். மேலும், புயலாக வலுப்பெற்ற பின் வட தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


