News March 24, 2025
ஒரு டம்ளர் மோர் குடிங்க..

✦கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சி நீங்கும். மோரில் வைட்டமின் பி2 இருப்பதால் கல்லீரல் நன்றாக செயல்பட வைக்கிறது. ✦மோருடன் இஞ்சி, சீரகம் சேர்த்து குடித்து வர வயிறு உப்புசம் நீங்கும். ✦மாதாவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, ரத்தப்போக்கை சமாளிக்க மோருடன் வெந்தயம் சேர்த்து குடிக்கலாம். ✦உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது.
Similar News
News December 1, 2025
சிவகங்கை பஸ் விபத்து: PM மோடி இரங்கல்

காரைக்குடி அருகே <<18432348>>அரசு பஸ்கள் விபத்தில்<<>> ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிப்பதாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உறவுகளை இழந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாக கூறிய அவர், PMNRF-ல் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 1, 2025
கேப்டன் கில்லின் நிலை என்ன?

SA-வுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக டெஸ்ட் & ODI தொடரில் இருந்து விலகிய அவர், இன்று BCCI-யின் சிறப்பு மையத்தில் (CoE) பயிற்சியை தொடங்கவுள்ளாராம். ஓரிரு நாள்களில் பேட்டிங் பயிற்சியை அவர் தொடங்குவார் என்றும், அதை தொடர்ந்தே SA-வுக்கு எதிரான T20 போட்டிகளில் கில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
News December 1, 2025
₹8,119 கோடிக்கு கோயில் நிலங்கள் மீட்பு: சேகர்பாபு

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 3,865 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும், ₹8,119 கோடி மதிப்பிலான 8,000 ஏக்கர் பரப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ₹1,557 கோடிக்கு உபயதாரர்கள் நிதி உதவி வழங்கி உள்ளதாகவும், அதன் மூலம் 12,000 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.


