News March 24, 2025
ஒரு டம்ளர் மோர் குடிங்க..

✦கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சி நீங்கும். மோரில் வைட்டமின் பி2 இருப்பதால் கல்லீரல் நன்றாக செயல்பட வைக்கிறது. ✦மோருடன் இஞ்சி, சீரகம் சேர்த்து குடித்து வர வயிறு உப்புசம் நீங்கும். ✦மாதாவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, ரத்தப்போக்கை சமாளிக்க மோருடன் வெந்தயம் சேர்த்து குடிக்கலாம். ✦உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது.
Similar News
News October 17, 2025
மூலிகை: நீர்முள்ளியின் மருத்துவ பயன்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ★நீர்முள்ளி விதைகள் முடக்குவாத பிரச்னைகளை சரி செய்ய உதவுகின்றன ★நீர்முள்ளியின் இலைகளை வேகவைத்து அந்த தண்ணீரை குடித்தால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் ★நீர்முள்ளியின் இலைகள் வயிற்று வலி & மலச்சிக்கலை சரி செய்கின்றன ★நீர்முள்ளி வேரை பொடியாக்கி நீரில் கரைத்து குடித்தால், மாதவிடாய் பிரச்னை சரியாகும். இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.
News October 17, 2025
எப்படி இருக்கிறது ‘டியூட்’.. ரசிகர்களின் ரிவ்யூ!

‘டியூட்’ படத்தின் முதல் காட்சியை வெளிமாநிலங்களில் பார்த்து முடித்த ரசிகர்கள் படத்திற்கு கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். படத்தின் முதல் பாதி சூப்பர் என்றும், 2-ம் பாதி சுமார் என்றும் குறிப்பிடுகின்றனர். வழக்கம் போல, PR தனது மேனரிசத்தால் கவர்ந்துவிட்டாராம். மமிதா பைஜு, சரத்குமார் ஆகியோர் சிறப்பாக நடித்திருப்பதாக கூறுகின்றனர். சாய் அபயங்கரின் இசை ஈர்த்ததாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
News October 17, 2025
BREAKING: விஜய் உடன் சந்திப்பு.. கண்ணீர் மல்க ஆறுதல்!

கரூர் வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் வந்த மதியழகன், பவுன்ராஜை விஜய் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, எதையும் சமாளிப்போம், நான் இருக்கிறேன் என விஜய் கூறியுள்ளார். மேலும், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நிலைமையை அவ்வப்போது தன்னிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், விரைவில் அவர்களை சந்திக்க வருவதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது, மதியழகனை கண்ணீர் மல்க கட்டியணைத்து விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.