News March 6, 2025
IPL-ல் ஆடை கட்டுப்பாடு? – பிசிசிஐ புதிய திட்டம்!

மார்ச் 22-ல் தொடங்கும் ஐபிஎல் தொடரை காண இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. போட்டிக்கு பிறகான நிகழ்ச்சியில் வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஆடை அணியக் கூடாது என்பதுதான் அந்த கட்டுப்பாடு. இதனை முதல் முறை மீறினால் எச்சரிக்கப்படும் என்றும், அடுத்த முறை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News March 6, 2025
தமிழ்நாட்டில் அமானுஷ்ய நடமாட்டம் உள்ள 10 இடங்கள்

தமிழ்நாட்டில் இந்த 10 இடங்களில் மர்மமான அலறல்கள், மாய உருவங்கள், விவரிக்க முடியாத உணர்வு, தற்கொலைகள் என அமானுஷ்ய நடமாட்டங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது: *டிமான்ட்டி காலனி *பெசன்ட் கார்டன் *புரோக்கன் பிரிட்ஜ் *வால்மீகி நகர் *பெசன்ட் அவென்யூ ரோட் *ECR சாலை *கரிகாட்டுக் குப்பம் *சென்னை கிறிஸ்தவ கல்லூரி (ஒரு அறை) *புளூகிராஸ் ரோட் *திருவண்ணாமலை ஹாண்டட் ஹவுஸ். உங்கள் ஊரில் இப்படிப்பட்ட இடங்கள் இருக்கா?
News March 6, 2025
3 பந்தில் 4 விக்கெட்

பாக்., வீரர்கள் தற்போது உள்நாட்டு தொடரில் விளையாடுகின்றனர். இதில் PTV அணிக்கு எதிரான போட்டியில் SBP அணியின் ஷாசாத் 3 பந்தில் 4 விக்கெட்டை எடுத்தார். அவர் வீசிய 26 ஓவரின் 3, 4வது பந்தில் PTVயின் உமர் அமீன், ஃபவாத் ஆலம் அவுட் ஆக, 5வது பந்தை எதிர்கொள்ள வந்த சவுத் ஷகீல் 3 நிமிடம் தாமதமாக வந்ததால் Timed Out விதிப்படி பந்தை சந்திக்காமலே அவுட்டானார். அதன்பின் 26.5 பந்தில் முகமது இர்பான் அவுட் ஆனார்.
News March 6, 2025
போர்க்களத்திலும் பூ பூக்கத்தானே செய்கிறது!

மேலே காணப்படும் இந்த போட்டோதான் இன்று உலகம் முழுவதும் வைரல். இஸ்ரேலின் தாக்குதலால் தவிடு பொடியான காசா பகுதியில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு திறந்த நிகழ்வுதான் இது. கட்டட இடிபாடுகளுக்கிடையே நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். இப்படியான காட்சிகளைப் பார்க்கும்போது மனம் கனத்துப் போகாமல் என்ன செய்யும்!