News August 9, 2024

மாதவிடாய் காரணமாக கனவு பறிபோனது: மீராபாய் சானு

image

ஒலிம்பிக்ஸ் தொடரில் பங்கேற்ற இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மாதவிடாய் காரணமாக வெற்றி வாய்ப்பை இழந்ததாக தெரிவித்துள்ளார். 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், 4ஆவது இடத்தை பிடித்தார். தோல்வி குறித்து அவர் பேசுகையில், “போட்டியின்போது எனக்கு மாதவிடாயின் மூன்றாவது நாள். மிகவும் பலவீனமாக உணர்ந்தேன். அதனால் பதக்கம் பறிபோனது” என வருத்தத்துடன் தெரிவித்தார்.

Similar News

News December 1, 2025

கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: OPS

image

சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அதை மேலும் 15 நாள்களுக்கு நீடிக்க வேண்டும் என OPS வலியுறுத்தியுள்ளார். TN-ல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருவதால், பயிர் சாகுபடி சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருப்பதாக விவசாயிகள் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்களின் கோரிக்கையில் 100% நியாயம் இருப்பதால் அதனை அரசு பரிசீலிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

News December 1, 2025

திரெளபதி -2ல் பாடியதற்கு மன்னிப்பு கேட்ட சின்மயி

image

இயக்குநர் மோகன்-ஜி-யின் திரௌபதி -2 படத்தில் ‘எம்கோனே’ பாடலை பாடியதற்கு சின்மயி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் அப்பாடலை பாடியதற்கு சின்மயி மன்னிப்பு கேட்டுள்ளார். ஜிப்ரான் அழைத்ததால் பாடலை பாடியதாகவும், அதை சுற்றியுள்ள விஷயங்களை இப்போதுதான் அறிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்பே தெரிந்திருந்தால் கொள்கை முரண் உள்ள அந்த பாடலை பாடியிருக்க மாட்டேன் எனவும் அவர் விளக்கியுள்ளார்.

News December 1, 2025

விஜய்க்கு அதிர்ச்சி.. மீண்டும் போலீஸை நாடிய தவெக

image

டிச.5-ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். ஆனால், அதற்கான அனுமதியை இதுவரை பெற முடியாமல் இருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 முறை மனு அளித்தும் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி ஐஜி அலுவலகத்தில் அனுமதி கேட்டு புஸ்ஸி ஆனந்த் 3-வது முறையாக மனு அளித்துள்ளார். இன்னும் 4 நாள்களே இருக்கும் நிலையில், அனுமதி கிடைக்குமா?

error: Content is protected !!