News August 14, 2024
திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாடுகிறது: ஆளுநர்

நாட்டில் 1947ல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் நீங்கவில்லை என, ஆளுநர் ரவி கூறியுள்ளார். சென்னை IIT நிகழ்ச்சியில் பேசிய அவர், பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரிப்பதாகவும், அதில் ஒன்று திராவிட சித்தாந்தம் என்றும் விமர்சித்துள்ளார். இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக திராவிட சித்தாந்தம் கருதவில்லை எனவும் அவர் சாடினார். மொழி, இருப்பிடம் மூலம், மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகிறார்கள் என்றும் குறை கூறினார்.
Similar News
News January 2, 2026
2026-ன் முதல் சூப்பர்மூன் எப்போது தெரியுமா?

இந்தாண்டின் முதல் சூப்பர்மூன் இன்று தெரியும். அதேபோல், ஜனவரி 3-ம் தேதி அதைவிட பெரிய நிலவான ‘Wolf Supermoon’ தோன்றும். இது, வழக்கத்தை விட 15% பெரிதாகவும், 30% பிரகாசமாகவும் இருக்கும். இந்த அற்புதமான காட்சியை நேரடியாக காணலாம். கடந்தாண்டு அக்., நவ., டிச., ஆகிய மாதங்களில் சூப்பர்மூன் தோன்றியது குறிப்பிடத்தக்கது. இன்று சூப்பர்மூன் பார்க்க தவறினால், நீங்கள் நவம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.
News January 2, 2026
ஜன.5-ல் கூட்டணி முடிவை எடுக்கும் பிரேமலதா

ஜனவரி 5-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று பிரேமலதா அறிவித்துள்ளார். இதுவரை, தேமுதிக கூட்டணி குறித்த முடிவை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் நிலையில், DMK அல்லது ADMK கூட்டணியில் தேமுதிக இணையுமா அல்லது தவெகவுடன் கைகோர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
News January 2, 2026
நேதாஜி பொன்மொழிகள்!

*வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது *உண்மையான நண்பனாக இரு அல்லது பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே *உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம் *கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதிவெற்றிக்கு உரியவர்கள் *வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம்


