News August 14, 2024
திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாடுகிறது: ஆளுநர்

நாட்டில் 1947ல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் நீங்கவில்லை என, ஆளுநர் ரவி கூறியுள்ளார். சென்னை IIT நிகழ்ச்சியில் பேசிய அவர், பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரிப்பதாகவும், அதில் ஒன்று திராவிட சித்தாந்தம் என்றும் விமர்சித்துள்ளார். இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக திராவிட சித்தாந்தம் கருதவில்லை எனவும் அவர் சாடினார். மொழி, இருப்பிடம் மூலம், மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகிறார்கள் என்றும் குறை கூறினார்.
Similar News
News January 2, 2026
PM KISAN அடுத்த தவணைத் தொகை எப்போது கிடைக்கும்?

PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகையை (₹2,000) மத்திய அரசு அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவணைத் தொகை தாமதமின்றி கிடைக்க, விவசாயிகள் e-KYC அப்டேட் செய்வது அவசியம். <
News January 2, 2026
இந்தூரில் விநியோகிப்பட்டது விஷம்: ராகுல் காந்தி

<<18732273>>இந்தூர் குடிநீர்<<>> விவகாரம் தொடர்பாக ம.பி., அரசை கண்டித்துள்ள ராகுல் காந்தி, இந்தூரில் விநியோகிக்கப்பட்டது குடிநீர் அல்ல; விஷம் என்று கடுமையாக சாடியுள்ளார். வீடுதோறும் மரண ஓலம் கேட்கும் நிலையில், பாஜக அரசு ஆணவத்தை பதிலாக அளித்துள்ளதாக கூறியுள்ளார். இருமல் மருந்து, மருத்துவமனையில் எலி, குடிநீர் மாசு என ஒவ்வொரு முறை ஏழைகள் சாகும்போதும், PM மோடி வழக்கம்போல மெளனமாகவே இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
News January 2, 2026
ஆடையை கழற்றி டான்ஸ் ஆட சொன்னார்: தனுஸ்ரீ தத்தா

‘தீராத விளையாட்டு பிள்ளை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. 2018 ஆம் ஆண்டு #MEE TOO மூலம் கவனம் பெற்றார். இந்நிலையில், ஷூட்டிங் ஒன்றில் இயக்குநர் எனது ஆடையை கழற்றிவிட்டு நடனமாடச் சொன்னதாக தனுஸ்ரீ குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு நான் எந்த பதிலும் அளிக்கவில்லை, சக நடிகர்களும் பதிலளிக்காததால், இயக்குநரும் அமைதியானார் என்றும் அவர் தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.


