News August 14, 2024
திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாடுகிறது: ஆளுநர்

நாட்டில் 1947ல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் நீங்கவில்லை என, ஆளுநர் ரவி கூறியுள்ளார். சென்னை IIT நிகழ்ச்சியில் பேசிய அவர், பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரிப்பதாகவும், அதில் ஒன்று திராவிட சித்தாந்தம் என்றும் விமர்சித்துள்ளார். இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக திராவிட சித்தாந்தம் கருதவில்லை எனவும் அவர் சாடினார். மொழி, இருப்பிடம் மூலம், மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகிறார்கள் என்றும் குறை கூறினார்.
Similar News
News December 27, 2025
மழை மீண்டும் வெளுக்கப் போகுது… வந்தது அலர்ட்

தமிழகத்தில் மழையின் தாக்கம் குறைந்து பனிப்பொழிவு அதிகமாகியுள்ளது. இந்நிலையில், மீண்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. அதாவது, நாளை மறுநாள்(டிச.29) தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், டிச.30 முதல் ஜன.2 வரை டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலர்ட்டா இருங்க மக்களே!
News December 27, 2025
ஹெச் வினோத் என்ன பேசப் போகிறார்?

ஜனநாயகன் பட ரிலீஸுக்கு இன்னும் 13 நாள்களே உள்ளன. படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் விஜய்யின் கடைசி பட இயக்குநரான ஹெச் வினோத், மேடையில் விஜய், ஜனநாயகன் குறித்து என்ன பேசப் போகிறார் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தனியார் விருதுவிழா மேடை தவிர வினோத் இதுவரை ஜனநாயகன் குறித்து எங்கேயும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News December 27, 2025
வடமாநில தொழிலாளர்களுக்கு அனுமதிச்சீட்டு: NTK தீர்மானம்!

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னை திருவேற்காட்டில் இன்று சீமான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு, பஞ்சமி நிலங்கள் மீட்பு, SIR-க்கு எதிர்ப்பு, வடமாநில தொழிலாளர்களுக்கு உள் நுழைவு அனுமதிச்சீட்டு தேவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என குறிப்பிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கவனம் பெற்றுள்ளன.


