News August 14, 2024
திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாடுகிறது: ஆளுநர்

நாட்டில் 1947ல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் நீங்கவில்லை என, ஆளுநர் ரவி கூறியுள்ளார். சென்னை IIT நிகழ்ச்சியில் பேசிய அவர், பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரிப்பதாகவும், அதில் ஒன்று திராவிட சித்தாந்தம் என்றும் விமர்சித்துள்ளார். இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக திராவிட சித்தாந்தம் கருதவில்லை எனவும் அவர் சாடினார். மொழி, இருப்பிடம் மூலம், மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகிறார்கள் என்றும் குறை கூறினார்.
Similar News
News November 21, 2025
Bro Code டைட்டில்: குழப்பத்தில் ரவி மோகன்

ரவி மோகன் தயாரிக்கும் படத்திற்கு ‘Bro Code’ டைட்டிலை பயன்படுத்த தடையில்லை என்று சென்னை HC உத்தரவிட்டுள்ளது. ரவி மோகன் தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இதே விவகாரத்தில் மதுபான நிறுவனம் தொடர்ந்த வழக்கில், டெல்லி ஐகோர்ட் ‘Bro Code’ பெயரை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதனால் எந்த ஐகோர்ட்டின் உத்தரவு செல்லும் என்ற குழப்பத்தில் ரவி மோகன் உள்ளார்.
News November 21, 2025
அரசு ஊழியர்களுக்கு திமுக மீண்டும் துரோகம்: அன்புமணி

தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்ததன் மூலம், பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படாது என்பது உறுதியாகியுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்காமல், அவர்களுக்கு திமுக அரசு மீண்டும் ஒரு துரோகத்தை செய்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News November 21, 2025
இறுதி பணி நாள்: CJI கவாய் உருக்கம்!

CJI <<18345604>>BR கவாயின்<<>> இறுதி பணி நாள் இன்று. இந்நிலையில், டாக்டர் அம்பேத்கர் வழியில், அடிப்படை உரிமைகளை, அரசின் கொள்கைகளுடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் நீதியை நிலை நாட்ட முடிந்தவரை முயற்சித்ததாக கூறியுள்ளார். எளிமையாக தீர்ப்புகள் எழுதுவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறிய அவர், 1985-ல் சட்டம் படிக்க ஒரு மாணவனாக சேர்ந்த தான், இன்று நீதித்துறை மாணவனாகவே விலகுவதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.


