News October 18, 2025

திராவிடத்திற்கும் EPS-க்கும் சம்பந்தமில்லை: சிவசங்கர்

image

திராவிடம் என்றாலே என்னவென்று தெரியாது என கூறிய EPS, திராவிட மாடலுக்கு நான் தான் உதாரணம் என்று சொல்வது கேவலமான கூத்து என SS சிவசங்கர் விமர்சித்துள்ளார். EPS-ஐ பொறுத்தவரை கட்சி, கொள்கை என்று எதுவுமே கிடையாது, அமித்ஷா திமுக என்ற நிலைக்கு அதிமுக சென்றுவிட்டதாகவும் சாடினார். அதிமுக எனும் கம்பெனியை குத்தகைக்கு எடுத்து நடத்தும் EPS-க்கும் திராவிடத்துக்கும் சம்பந்தமில்லை என்று குறிப்பிட்டார்.

Similar News

News October 18, 2025

BREAKING: அறிவித்தார் விஜய்

image

கரூர் துயரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹20 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும், அது கிடைத்ததும் நிச்சயமாக சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உறவுகளை இழந்தவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

News October 18, 2025

Sports Roundup: வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை

image

*சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில், இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. *இஸ்தான்புல்லில் நடந்த சர்வதேச வாள்வீச்சு தொடரில் பவானி தேவி வெள்ளி வென்றார். உலக ஜூனியர் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தான்வி சர்மா முன்னேற்றம். *ஆசிய மகளிர் 7’S ரக்பி சீரிஸில், இந்தியா 0-43 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானிடம் படுதோல்வி.

News October 18, 2025

பிறந்த குழந்தையை எப்போது தூளியில் போடணும்?

image

பிறந்த குழந்தையை தூங்க வைக்க காலங்காலமாக நாம் பயன்படுத்துவது தூளிதான். ஆனால், இதில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். குழந்தை பிறந்து 2 வாரங்களுக்கு பின்பே தூளியில் போடவேண்டுமாம். மேலும், குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு பிறகு தூளி பயன்படுத்துவதை குறைப்பது நல்லதாம். குழந்தையை சீக்கிரம் தூங்க வைக்க தூளியை வேகமாக ஆட்டக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர். SHARE.

error: Content is protected !!