News February 27, 2025

மார்ச் முதல் அதிரடி மாற்றம் .. லேட்டா வந்தால் ஆப் சென்ட்

image

அனைத்து அரசு ஹாஸ்பிடல்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயமாக்கப்படுகிறது. அமைச்சர் மா.சு திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, பல இடங்களில் டாக்டர்கள், ஊழியர்கள் இல்லாதது தெரியவந்தது. இந்நிலையில், டாக்டர் – டிரைவர் வரை அனைத்து ஊழியர்களும் மார்ச் முதல் பயோமெட்ரிக் வருகையை பதிவு செய்ய வேண்டும். விடுப்பு, ஆப் சென்ட் போன்ற பணிக்கு வராதவர்களின் விவரங்களை தினமும் காலை 8க்குள் அப்டேட் செய்ய வேண்டுமாம்.

Similar News

News February 28, 2025

இரவில் நிம்மதியான தூக்கத்திற்கு..

image

நமது உடலில் சுரக்கும் மெலடோனின் என்ற ஹார்மோன்தான் நம்மை தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்த ஹார்மோன், இருட்டிய பின்னர்தான் சுரக்கத் தொடங்கும். அப்போது நாம் செல்ஃபோன் பார்த்துக் கொண்டு இருந்தால் இந்த ஹார்மோன் சுரக்காது. இதனால்தான், அத்தகைய வேளைகளில் நமக்கு தூக்கம் வருவதில்லை. எனவே தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்ஃபோன் பார்ப்பதை நிறுத்திவிட்டால், நிம்மதியாக தூங்கலாம்.

News February 28, 2025

வாட்டி வதைக்கும் வெயில்: ஹீட் ஸ்ட்ரோக்-க்கு உடனே சிகிச்சை

image

கோடை வெயிலால் ஏற்படும் வெப்ப வாதத்திற்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, ➤ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள், ➤உப்பு-சர்க்கரை கரைசல், ➤குடிநீர் வசதி, ➤மருந்துகள் & தடுப்பூசிகள் மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் என்ற வெப்பவாத பாதிப்புக்கு துரித சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது

News February 28, 2025

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவு கட்டாயம்?

image

புலம்பெயர் தொழிலாளர்களால் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க, அவர்களின் பயோமெட்ரிக் பதிவை கட்டாயமாக்க அரசுக்கு 5ஆவது காவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வரும் கான்டிராக்டர்களின் பயோ மெட்ரிக்கையும் பதிவிட வேண்டும், அவர்களுக்கு வீடு அளிக்கும் உரிமையாளர்கள் அடையாள சான்றுகளை வாங்கி காவல்நிலையத்தில் அளிக்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

error: Content is protected !!