News April 21, 2024
தமிழ்நாட்டில் முதல்முறையாக வரையாடுகள் கணக்கெடுப்பு

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் அரிய வகை விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு பணி வரும், ஏப்.29 முதல் மே 1ம் தேதி வரை நடக்கிறது. நீலகிரி, முக்கூர்த்தி தேசிய பூங்கா முதல் கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம் வரையிலான, மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள வரையாடுகளின், 140 வாழ்விடங்களில் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் மேற்கொள்கின்றனர்.
Similar News
News February 2, 2026
10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. வசமாக சிக்கினார்

புத்தகத்தை சுமக்க வேண்டிய வயது.. ஆனால், வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறாள் அந்த 10-ம் வகுப்பு மாணவி. மதுரையில்தான் இந்த அவலம் நடந்திருக்கிறது. பிரபாகரன்(29) என்பவருடன் அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட, இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இப்போது, சிறுமி கர்ப்பமாக இருக்கிறாள். பிரசவ வலியால் அரசு ஹாஸ்பிடலுக்குச் சென்றதால் விஷயம் வெளியே தெரியவந்துள்ளது. தற்போது, பிரபாகரன் கம்பி எண்ணுகிறார்.
News February 2, 2026
தங்கம் விலை உயர்வு ஏன்? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாகவே தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவுவதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலகின் எந்த நாட்டு கரன்சி மீதும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லை; அதனால் பல மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறித்து எந்த புதிய அறிவிப்பும் வெளியாகவில்லை.
News February 2, 2026
உங்களிடம் தங்கப் பத்திரம் இருக்கா? இது உங்களுக்கு தான்

பட்ஜெட்டில் தங்கப் பத்திரங்களுக்கான வரி விலக்கு விதிகளில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. RBI-யிடம் நேரடியாக வாங்கும் தங்கப் பத்திரங்களை முதிர்வு காலம் வரை வைத்திருந்தால் மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும். மாறாக பங்குச் சந்தையில் வாங்கி முதிர்வு காலம் வரை வைத்திருந்தாலோ, முதிர்வு காலத்திற்கு முன் விற்றாலோ நீங்கள் பெறும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும். வட்டி விகிதத்தில் (2.5%) மாற்றமில்லை.


