News September 29, 2025
கரூர் துயரத்தில் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள்

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அண்ணாமலை, EPS, கிருஷ்ணசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சந்தேகம் எழுப்புகின்றனர். பரப்புரையின்போது மின்சாரம் துண்டிப்பு, போலீஸ் தடியடி, குறுகிய இடத்தில் அனுமதி, ஆம்புலன்ஸ் நுழைந்தது என பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, குறுகிய இடத்தில் விஜய்க்கு அனுமதி அளிப்பது தவறு என, சில நாள்களுக்கு முன்பே சிலர் எச்சரித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
Similar News
News September 29, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ₹60 உயர்ந்து ₹10,700-க்கும், 1 சவரனுக்கு ₹480 உயர்ந்து ₹85,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாள்களில் மட்டும் தங்கம் விலை ₹3280 அதிகரித்துள்ளது. இனி வரும் நாள்களில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
News September 29, 2025
மூலிகை: மாசிக்காயின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ✱தேமல், படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மீது மாசிக்காய் பொடியை நீரில் குழைத்து தினமும் தடவி வர குணமடையும் ✱மாசிக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குணமாகும் ✱டான்சில்ஸ், இருமல், தொண்டைக்கட்டு ஆகிய பிரச்னைக்கு மாசிக்காய் பொடியை, கற்பூரவள்ளி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட குணமாகும். SHARE.
News September 29, 2025
கரூர் துயரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்: GK வாசன்

எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டங்களுக்கு போலீஸ் சரியான பாதுகாப்பு கொடுப்பதில்லை என ஜிகே வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் பரப்புரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது சந்தேகத்தை கிளப்புகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களை காப்பாற்ற உயர்வகை சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.