News March 19, 2024
சூர்யகுமார் விளையாடுவதில் சந்தேகம்

நடப்பு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. குடலிறக்கம் காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், அதைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு சென்றார். அப்போது நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் முழுமையாக அவர் தயாராக 3 வாரங்கள் வரை தேவைப்படும் என தெரியவந்துள்ளது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News September 17, 2025
அமித்ஷாவை சந்தித்தது ஏன்? EPS விளக்கம்

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது தொடர்பாக, EPS தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் கடிதம் வழங்கியதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாரத ரத்னா கோரிக்கை கடிதம் வழங்கியதன் போட்டோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
News September 17, 2025
திறக்காத 5 கதவுகள்

உலகில் தற்போதுவரை பல விஷயங்கள் தெரியாமல் உள்ளன. வரலாறு தொடர்புடைய சில இடங்களில் என்ன இருக்கிறது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. பயத்தில் சில இடங்கள் மூடப்பட்டு இருக்கிறது. அதுபோன்று உலகின் இதுவரை திறக்கப்படாத 5 கதவுகள் என்ன என்று போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதை தவிர வேறேதும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 17, 2025
BREAKING: நடிகர் ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார்

பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில், தனியார் TV நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பின்போது ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர். ஏற்கெனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர், அதிலிருந்து மெல்ல மீண்டு வந்தது கவனிக்கத்தக்கது.