News October 13, 2025

திமுக மீதான சந்தேகத்திற்கு விடை கிடைக்கும்: நயினார்

image

கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க SC உத்தரவிட்டதற்கு நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கரூர் விவகாரத்தில் திமுக அரசின் அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கும் எனவும் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Similar News

News October 13, 2025

தீபாவளி விடுமுறை.. பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு

image

தீபாவளி விடுமுறை கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, *கூட்டமான தெருக்கள், சாலைகளில் வெடிக்க வேண்டாம். *பெற்றோர் முன்னிலையில் குழந்தைகள் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். *மூடிய பெட்டிகள், பாட்டில்களில் வைத்து வெடிக்கக் கூடாது. *குடிசைகள் அருகில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். *ஹாஸ்பிடல் அருகே வெடிப்பதை தவிர்க்கவும். SHARE IT.

News October 13, 2025

தேர்தல் நேரத்தில் தேஜஸ்விக்கு வந்த சிக்கல்!

image

IRCTC ஹோட்டல் தொடர்பான ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், ராப்ரி தேவி ஆகியோருக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. மூவர் மீதும் மோசடி, கிரிமினல் சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிஹார் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், இது RJD கட்சிக்கும், தேஜஸ்விக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

News October 13, 2025

BREAKING: விஜய் ஆதரவு

image

கரூர் துயர வழக்கை சிபிஐக்கு மாற்றி SC உத்தரவிட்டதை ஆதரிக்கும் விதமாக, தனது X பக்கத்தில் விஜய் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டு 13 நாள்களாகின்றன. அதன் பிறகு, சோஷியல் மீடியாவில் அவர் எந்த பதிவும் போடவில்லை. இந்நிலையில், ‘நீதி வெல்லும்’ என தற்போது பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ஆதரவளித்து தவெக தொண்டர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!