News March 17, 2024
தேர்தல் ஆணையம் மீதுதான் சந்தேகம்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மீதே சந்தேகம் உள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தேதியை நேற்று அறிவித்த தேர்தல் ஆணையம், பொய் செய்தி அதிகம் பரவுவதாக கவலை தெரிவித்தது. இதனை மேற்கோள்காட்டிய அவர், ஆணையம் மீதுதான் முதல் சந்தேகம் எழுகிறது என்றார். மேலும், எதிரிகள் எந்த ஆயுதம் எடுக்கிறார்களோ அதைவிட சிறப்பான ஆயுதத்தை எடுத்து வெற்றி பெறுவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்
Similar News
News August 7, 2025
PM மோடியை சந்தித்த கமல்: கீழடி குறித்து கோரிக்கை

PM மோடியை MP கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார். இதுபற்றி தனது X பதிவில், கலைஞராகவும், தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் PM மோடியை தான் சந்தித்ததாகவும், அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் அதில் தலையாயது கீழடி என குறிப்பிட்டுள்ளார். தமிழின் தொன்மை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு மோடி உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
இதய நோய்களை தடுக்க… இதை செய்யுங்கள்

*முழு தானியங்கள், நட்ஸ், காய்கறிகள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், மீன், ஆலிவ் எண்ணெய், சீசனுக்குரிய பழங்கள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும் *ஆட்டிறைச்சி, சர்க்கரை, உப்பு, எண்ணெய் & நெய் இவற்றை குறைத்துக் கொள்ளவும். *காய்கறிகள், பழங்களை 5 வேளை பிரித்து உண்ணலாம். *தினசரி குறைந்தது 6 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள் *தினசரி குறைந்தது 20 நிமிடங்களாவது உடலுழைப்பு (அ) உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்
News August 7, 2025
₹3,500 கோடி ஊழல் வழக்கில் சிக்கிய நடிகை தமன்னா?

ஆந்திராவில் ₹3,500 கோடி மதுபான ஊழல் வழக்கின் விசாரணை வளையத்திற்குள் நடிகை தமன்னா சிக்கியுள்ளார். ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த இந்த மோசடியில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், தமன்னாவுக்கு தொடர்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. மோசடி பணத்தில் அவரது ‛ஒயிட் அண்ட் கோல்டு’ கம்பெனி 300 கிலோ தங்கம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.