News January 3, 2025
இன்று முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்

நடப்பாண்டு 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹249.76 கோடி செலவில் பொங்கல் பரிசு தொகுப்பினை TN அரசு வழங்க உள்ளது. இதில், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையொட்டி, ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் இன்று முதல் வீடு வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதில், பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
Similar News
News November 16, 2025
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க TIPS

பெற்றோர்களே, உங்கள் குழந்தை 2 நிமிடங்களுக்கு முன் படித்ததை மறந்துவிடுவதால் டென்ஷன் ஆகுதா? அவங்கள திட்டாதீங்க. அவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க சில வழிகள் இருக்கு. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை (முட்டைக்கோஸ், வல்லாரை கீரை, திராட்சை) கொடுங்கள். சரியான உறக்கம், சுறுசுறுப்பான விளையாட்டு ஆகியவற்றை பழக்கப்படுத்துங்கள். புதிய புதிய விஷயங்களை கற்பதும் அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். SHARE.
News November 16, 2025
இதெல்லாம் ரூல்ஸ் கிடையாது… ஆனால், ஃபாலோ பண்ணணும்

சீனாவில் சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால், அதை அனைவரும் கடைப்பிடித்து வருகின்றனர். காலங்காலமாக பின்பற்றப்படும் அந்த விதிமுறைகளில் சிலவற்றை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் எந்த விதிகள் உங்களை ஆச்சரியப்பட வைத்தது? SHARE
News November 16, 2025
10.5% இடஒதுக்கீடு கோரி போராட்டம்: ராமதாஸ்

TN-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி டிச.12-ல் போராட்டம் நடத்தவுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கோரிக்கையும் வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.17-ல் அன்புமணி நடத்தும் சிறை நிரப்பும் போராட்டம் குறித்து தனக்கு தெரியாது என்று குறிப்பிட்ட ராமதாஸ், இப்போராட்டத்தால் தமிழகமே குலுங்கும் என்று பேசியுள்ளார்.


