News March 15, 2025
உழவர் சந்தைகளில் இருந்து காய்கறிகள் டோர் டெலிவரி

உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு நேரடியாக டெலிவரி செய்யும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைந்து இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இன்றி மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும். மேலும், இது நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள், சிறு,குறு வணிகர்களும் நேரடியாகப் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 15, 2025
கனிமொழி விமர்சனம்: சீறிய பவன் கல்யாண்

தான் இந்தி மொழியை ஒருபோதும் எதிர்த்ததில்லை; இந்தி திணிப்பை மட்டுமே எதிர்த்திருக்கிறேன் என ஆந்திரா DY CM <<15769285>>பவன் கல்யாண்<<>> தெரிவித்துள்ளார். மேலும், NEP இந்தியை திணிக்கவில்லை எனக் கூறிய அவர், தான் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக, பாஜக கூட்டணியில் இணைவதற்கு முன்பு GO BACK HINDI என பவன் கல்யாண் பதிவிட்டிருந்ததை கனிமொழி இன்று பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
News March 15, 2025
என் வாழ்க்கையே மாறிவிட்டது: கயாடு லோஹர்

நடிகை கயாடு லோஹர், ‘டிராகன்’ படம் குறித்து பேட்டியொன்றில் பேசினார். கீர்த்தி கேரக்டரை தான் டைரக்டர் அஷ்வத் மாரிமுத்து முதலில் எனக்கு ஃபிக்ஸ் செய்திருந்தார். பின்னர்தான், பல்லவி கேரக்டர் எனக்கு கொடுக்கப்பட்டது. 2 ஹீரோயின் படம் என்றாலும், மக்களுக்கு உன்னை பிடிக்கும் வகையில் காட்டுவேன் என அவர் கூறினார். சொன்னபடியே செய்து, என் வாழ்க்கையையே இன்று அஷ்வத் மாற்றிவிட்டார் என கயாடு கூறினார்.
News March 15, 2025
விலைவாசிக்கு ஏற்ப ஊதிய உயர்வு: நிலைக்குழு பரிந்துரை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட ஊதியத்தை விலைவாசிக்கு ஏற்ப உயர்த்த மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஊதியத்தில் வேறுபாடு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஊரக மேம்பாட்டுக்கான நிலைக்குழு, நாடு முழுவதும் ஒரே சீரான ஊதியத்தை வழங்கவும் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து பலமுறை பரிந்துரை அளித்தும் செயல்படுத்தவில்லை எனவும் விமர்சித்துள்ளது.