News April 27, 2024
தேர்தலுக்காக எங்களைப் பயன்படுத்த வேண்டாம்

தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காக பாகிஸ்தான் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய அரசியல்வாதிகளுக்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் குறித்து தவறான கருத்துகளைத் தெரிவிப்பது பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீர் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜஸ்தானில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 14, 2025
பிஹார் தேர்தல் முடிவு: எந்த நேரத்திலும் மாற்றம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் கூட மாற்றம் ஏற்படும் என தெரிகிறது. NDA – 91 இடங்களிலும், ஆர்ஜேடி – காங்கிரஸின் மகா (MGB) கூட்டணி 63 இடங்களிலும், ஜன்சுராஜ் 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. குறிப்பாக, NDA கூட்டணி வேட்பாளர்கள் பலர் 2000 முதல் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே முன்னிலையில் இருப்பதால், எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.
News November 14, 2025
தேஜஸ்வி யாதவ் முன்னிலை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகிக்கிறார். இந்த தொகுதியில் பாஜக சார்பாக சதீஸ் குமார் என்பவர் வேட்பாளராக உள்ளார். ஆனால் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
News November 14, 2025
பிஹார் தேர்தல்.. பாஜக முன்னிலை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நொடிக்கு நொடி மாற்றம் நிகழ்கிறது. ஜேடியூ – பாஜக கூட்டணி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நேர நிலவரப்படி, BJP -39, JDY -30, LJP(RV) 3 என மொத்தம் 72 இடங்களில் NDA கூட்டணியும், RJD – 33, cong – 8, CPI (ML) 3 என MGB கூட்டணி 44 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.


