News April 21, 2025
AI-யிடம் நன்றி சொல்லாதீங்க… கரண்ட் செலவாகுதாம்

மின்சார சிக்கனம்; தேவை இக்கணம் என்ற வாசகத்தை அவ்வளவு எளிதில் தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தற்போது அது AI மாடல்களிடம் உரையாற்றுவதற்கும் தேவைப்படுகிறதாம். Thank you, hello, please போன்ற சிறிய உரையாடல்களுக்கு கூட மின்சாரத்திற்கு கோடிக்கணக்கான டாலர்கள் செலவாவதாகக் கூறி OPEN AI சிஇஓ சாம் அல்ட்மென் அதிர்ச்சியளித்துள்ளார். எனவே, தேவையானதை மட்டும் AI–யிடம் கேளுங்கள். ப்ளீஸ்…
Similar News
News September 17, 2025
SBIயில் கொள்ளை: ₹20 கோடி மதிப்பிலான நகை திருட்டு

கர்நாடகாவின் சடச்சான் SBI வங்கியில் இருந்து 20 கோடி மதிப்புள்ள தங்க நகை, ஒரு கோடி ரொக்கத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துள்ளது. ராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் நேற்று மாலை அந்த வங்கிக்குள் ஒரு கும்பல் நுழைந்துள்ளது. பதறிப்போன வங்கி ஊழியர்களை, மிரட்டி கழிப்பறையில் அடைத்து வைத்துள்ளனர். பின்னர் மேலாளரிடம் இருந்து சாவிகளை பறித்த அக்கும்பல், நகை மற்றும் பணத்துடன் மகாராஷ்டிராவுக்கு தப்பியுள்ளனர்.
News September 17, 2025
ரேஷன் பொருள் வாங்க ‘மொபைல் முத்தம்மா’ திட்டம்

ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிட சரியான சில்லறை இல்லாம கஷ்டப்படுறீங்களா? இதற்கு தீர்வு காண ‘மொபைல் முத்தம்மா திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பொருள்கள் வாங்கும் போது ரொக்கமாக செலுத்தாமல், ரேஷன் கடையில் உள்ள QR code-ஐ வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் ஸ்கேன் செய்து பணப் பரிவர்த்தனை செய்யலாம். பணம் அரசின் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுவதால் முறைகேடுகளும் தடுக்கப்படும்.
News September 17, 2025
ஜப்பானில் சிக்கிய போலி பாக்., கால்பந்து அணி

பாக்.,ஐ சேர்ந்த 22 பேர் அடங்கிய போலி கால்பந்து குழு ஜப்பானில் கொத்தாக சிக்கியுள்ளனர். ‘Golden Football Trial’ என்ற டீம் பெயருடன், 22 பேரும் கால்பந்து வீரர்கள் போல் நடித்து போலியாக கொடுத்த ஆவணத்தின் பின்னணியில், இது மோசடியானது என கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாலிக் வகாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக, பாக்.,ன் FIA விசாரணைக்குழு கூறியுள்ளது.