News September 5, 2025
காலடி வைக்காதே.. EPSக்கு எச்சரிக்கை

EPS-ஐ எச்சரித்து தேனி மாவட்டம் முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போடியில் இன்று EPS பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் தேனியில் காலடி வைக்காதே என்று, குறிப்பிட்ட ஒரு பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. அதில், எங்களை வஞ்சிக்கும் உங்களுக்கு இந்த மண்ணில் என்ன வேலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இன்று காலை EPS விவசாயிகளுடனான சந்திப்பை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 13, 2026
கேஸ் சிலிண்டர்.. முற்றிலும் முடங்கப்போகுது

சிலிண்டர் தட்டுப்பாட்டால் சிறு, குறு தொழில்கள் 2 நாள்களுக்குள் முற்றிலும் முடங்கவுள்ளதாக MSME முன்னாள் தலைவர் ரகுநாதன் தெரிவித்துள்ளார். மூலப்பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும், தயார் நிலையில் உள்ள பொருள்களையும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், மூலப்பொருள்கள் விலை உயர்வால் திருப்பூரில் சாய ஆலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News March 13, 2026
BREAKING: கட்சியில் இணைந்தார் சசிகலா..

அனைத்து இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் (அஇபுதமமுக) சசிகலா இணைந்துள்ளார். இக்கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னத்தையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக கூறி கொடியையும் அறிமுகப்படுத்திய அவர், தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சியில் தன்னை இணைத்து கொண்டதாக தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் தமிழகம், புதுவையில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
News March 13, 2026
EPS தலைமையில் 10 தோல்விகள்: OPS

ஊர்ந்து சென்று பதவியைப் பெற்று, அதை கொடுத்தவருக்கே நன்றி இல்லாமல் இருப்பவர்தான் அவர் (EPS) என்று OPS விமர்சித்துள்ளார். அவரது பெயரை சொல்லக்கூட தனக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தென்காசி பரப்புரையில் பேசிய அவர், EPS தலைமையில் அதிமுக சந்தித்த 10 தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியை சந்தித்தாக குறிப்பிட்டார். நன்றி மறந்தவர்களுக்கு தமிழக மக்கள் எப்போதுமே வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.


