News March 30, 2025
மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம்

பிற்பகல் (12 -3 மணி வரை) நேரத்தில் கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் வெளியே வராமல், வீட்டிலேயே இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சு. கேட்டுக்கொண்டார். வெயில் காலத்தில் தர்ப்பூசணி நல்ல நீர்ச்சத்து உள்ள பழம் என்றும் இந்த பழத்தை உட்கொள்வது நல்லது என்றாலும், தீய நோக்கம் கொண்டவர்கள், கலப்படம் செய்வதாகவும் கூறினார். இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
Similar News
News April 1, 2025
நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு கனமழை

கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News April 1, 2025
ரேஷன் கார்டு ‘KYC’ ஏப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு

ரேஷன் கார்டில் ‘<<15929022>>KYC<<>>’ மேற்கொள்ள நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், தற்போது ஏப்.30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரேஷன் மோசடிகள் அதிகமாக நடப்பதால் பொதுமக்களை KYC மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டு தகுதியான மக்களுக்கு மட்டும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் விளக்கம் அளித்துள்ளது. உடனே உங்கள் ரேஷன் கார்டுக்கு விரல் பதிவை செய்யுங்க..
News April 1, 2025
உச்சத்தை தொட்ட யுபிஐ பரிவர்த்தனை

நாட்டில் பெரும்பாலானோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், யுபிஐ மூலம் மார்ச் மாதத்தில் ₹24.77 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டதாக NPCI தெரிவித்துள்ளது. இது இதுவரையில் இல்லாத உச்சம் ஆகும். சராசரி பரிவர்த்தனை மதிப்பும் ஒரு நாளைக்கு ₹79,903 கோடியாக உயர்ந்துள்ளது, இது பிப்ரவரி மாதத்தை விட 1.9% அதிகமாகும். பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் 25% அதிகரித்துள்ளது.