News September 2, 2025

சாயங்காலத்திற்கு பிறகு இதை செய்யாதீங்க..!

image

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மாலை 5 மணிக்கு பிறகு 5 விஷயங்களை செய்யக்கூடாதாம். பால், தயிர், உப்பு, சர்க்கரை, மஞ்சள் இவற்றை கடனாகவோ தானமாகவோ அளிக்கக் கூடாது எனவும் அப்படி செய்தால், செல்வ இழப்பை சந்திக்கலாம் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். மேலும், குடும்ப மகிழ்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துமாம். அதனால், பக்கத்து வீட்டுக்காரர்கள் இதனை கேட்டால் முடிந்தளவு சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே கொடுங்கள். SHARE IT.

Similar News

News March 4, 2026

தவெக கூட்டணியில் இருந்தும் போட்டியில்லையா?

image

இதுவரை விஜய்யை நம்பி தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி மட்டுமே கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த கட்சியின் தலைவர் முஸ்தபாவும் ஆக்டிவ்வாக தவெகவுக்காக பல விவாத மேடைகளில் கலந்துகொண்டு வருகிறார். இதனால் விஜய்யிடமும் அவருக்கு நன்மதிப்பு இருக்கிறதாம். ஆனால், முஸ்தபாவோ வரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் காட்டவில்லை என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தவெக தனித்து களம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.

News March 4, 2026

சிலரின் தோல்விகளை மறைக்கவே போர்: ஸ்பெயின்

image

போர் வேண்டாம் என்ற நிலைபாட்டில் ஸ்பெயின் அரசும், மக்களும் உள்ளதாக அந்நாட்டின் PM பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார். <<19293932>>ஸ்பெயின் உடனான வர்த்தக உறவை துண்டிப்பதாக டிரம்ப்<<>> அறிவித்தார். அதற்கு பதிலளித்து பேசிய பெட்ரோ, ஈரான் மீதான போர் மனிதகுலத்தின் மிகப்பெரிய பேரழிவிற்கான தொடக்கம் என்றும், சில அதிபர்கள் தங்கள் தோல்விகளை மறைக்க போரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது எனவும் டிரம்ப்பை விமர்சித்துள்ளார்.

News March 4, 2026

சூடு சொரணை இல்லாத காங்கிரஸார்: விஜயதரணி

image

காங்கிரஸில் இன்று 99% பேர் திமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்வதாக விஜயதரணி தெரிவித்துள்ளார். சூடு சொரணை இல்லாத 1% பேர்தான் திமுக அரசிடம் சில பல சலுகைகளை அனுபவித்துக்கொண்டு அங்கு இருக்க வேண்டும் என சொல்கிறார்கள் என சாடியுள்ளார். 23 வருடமாக தன் இளமை காலத்தையெல்லாம் காங்கிரஸில் செலவு செய்ததாகவும், மக்கள் பணி செய்ய நினைத்தபோது இடையூறு தந்ததால் அக்கட்சியில் இருந்து வெளியேறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!