News March 12, 2025
தமிழக கல்வி முறையை சீர்குலைக்காதீங்க: அன்பில்

NEP-ஐ விட சிறப்பாக செயல்படும் அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இருமொழி அடித்தளத்துடன் செயல்படும் தமிழ்நாட்டில் 1,635 CBSE பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால்,1.09 கோடி மாணவர்கள் மாநில கல்வித் திட்டத்தில் பயின்று வருகின்றனர். இதன் மூலம் மக்கள் எந்த கல்வி முறையை விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
போர் இந்தியாவின் வாசலுக்கே வந்துவிட்டது: ராகுல்

இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல் வீழ்த்தப்பட்டது குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார். போர் இந்தியாவின் வாசலுக்கே வந்துவிட்டதாக கூறிய அவர், PM மோடி இதைபற்றி வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார் என விமர்சித்துள்ளார். மேலும், இதுபோன்ற ஒரு தருணத்தில் இந்தியாவுக்கு ஒரு நிலையான பிரதமர் தேவை எனவும், ஆனால் USA-விடம் நாட்டையே விட்டுக்கொடுத்த ஒரு பிரதமரை இந்தியா தற்போது கொண்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.
News March 5, 2026
விஜய் கூட்டணியில் பெரிய கட்சி.. சற்றுநேரத்தில் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணியும், திமுக கூட்டணியில் இணைய திருமாவும் முட்டுக்கட்டை போட்டதால், ராமதாஸ் இதுவரை கூட்டணியை அறிவிக்காமல் இருக்கிறார். இந்நிலையில், தைலாபுரம் இல்லத்தில் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி செல்ல ராமதாஸ் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 5, 2026
அது வெறும் குரங்கல்ல.. 13-ம் நாள் காரியம் செய்த மக்கள்!

குரங்கிற்கு காரியமா என தோன்றலாம். ஆனால், ம.பி.,யின் டலபட்புரா மக்கள், அது தங்கள் வீட்டின் அங்கம் என உருகுகின்றனர். பல ஆண்டுகள் தங்களுடன் வாழ்ந்து வந்த குரங்கு விபத்தில் இறந்துவிட கிராமமே சோகத்தில் மூழ்கியது. கண்ணீர் மல்க இறுதி மரியாதை செய்தவர்கள், 13-ம் நாள் காரியமும் செய்துள்ளனர். குரங்கின் போட்டோவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குரங்குடனான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளனர்.


