News April 14, 2025
காலை 11 மணி முதலே வெளியே வராதீங்க

தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெப்பநிலை இயல்பை விட 2 -4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, மக்கள் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக அளவு தண்ணீர், மோர் போன்றவறை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று(டிச.2) சவரனுக்கு ₹240 குறைந்துள்ளது. 22 கேரட் கிராமுக்கு ₹30 குறைந்து ₹12,040-க்கும், சவரன் ₹96,320-க்கும் விற்பனையாகிறது. இந்திய சந்தையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவால் மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹196-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,96,000-க்கும் விற்பனையாகிறது.
News December 2, 2025
FLASH: ஆட்டம் காட்டும் பங்குச்சந்தைகள்!

பங்குச்சந்தைகள் நேற்று போலவே இன்றும் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 332 புள்ளிகள் சரிந்து 85,308 புள்ளிகளிலும், நிஃப்டி 98 புள்ளிகள் சரிந்து 26,077 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக ICICI Bank, Bajaj Finserv, Axis Bank, Reliance உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 5 முதல் 12% வரை குறைந்துள்ளது.
News December 2, 2025
2026 தேர்தலுக்கு பிரேமலதா போடும் புது ரூட்டு

தேமுதிக தொண்டர்களை உயர் பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பதே தனது ஆசை என பிரேமலதா கூறியுள்ளார். 2026 தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கும் எனக் கூறி வரும் அவர், கட்சிக்காக உழைத்த புது முகங்களை வேட்பாளர்களாக களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் என்ற பிம்பம் உடையும் எனவும் பிரேமலதா நம்புவதாக கூறப்படுகிறது.


