News April 14, 2025

காலை 11 மணி முதலே வெளியே வராதீங்க

image

தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெப்பநிலை இயல்பை விட 2 -4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, மக்கள் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக அளவு தண்ணீர், மோர் போன்றவறை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

இன்று விடுமுறை எடுத்தால் சம்பளம் கட்

image

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ இன்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், SIR கணக்கெடுப்பு பணியை புறக்கணிப்பதாக வருவாய் அலுவலர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் + துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.

News November 18, 2025

இன்று விடுமுறை எடுத்தால் சம்பளம் கட்

image

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ இன்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், SIR கணக்கெடுப்பு பணியை புறக்கணிப்பதாக வருவாய் அலுவலர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் + துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.

News November 18, 2025

நாளை தமிழகம் வருகிறார் PM மோடி

image

வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை(நவ.19) PM மோடி தமிழகம் வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் 5000 விவசாயிகள் பங்கேற்கின்றனர். மண் வளம், மனித வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!