News April 14, 2025
காலை 11 மணி முதலே வெளியே வராதீங்க

தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெப்பநிலை இயல்பை விட 2 -4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, மக்கள் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக அளவு தண்ணீர், மோர் போன்றவறை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
சற்றுமுன்: நேரில் சந்திக்கிறார் இபிஎஸ்.. திடீர் திருப்பம்

தமிழ்நாட்டிற்கு வருகை தரும் அமித்ஷாவை ஜன.5-ம் தேதி EPS சந்திக்க உள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜன.5 காலை அமித்ஷா சாமி தரிசனம் செய்தபிறகு, இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. அப்போது, கூட்டணியில் OPS, TTV இணைப்பது, தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர். இதனால், OPS தரப்பு சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
News January 2, 2026
வெளிநாட்டு கொய்யா சாப்பிடாதீங்க!

நீரிழிவு நோயாளிகள் டென்னிஸ் பந்து அளவுக்கு இருக்கும் வெளிநாட்டு கொய்யாவை சாப்பிட கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அதில் இருக்கிற சர்க்கரைச்சத்து வெகு சீக்கிரம் ரத்தத்தில் கலந்துவிடும் என எச்சரிக்கின்றனர். இதற்கு பதிலாக, நாட்டு கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, தர்பூசணி, நாவல் பழம் ஆகியவற்றை சாப்பிடலாம் என பரித்துரைக்கின்றனர்.
News January 2, 2026
அடுத்தடுத்து திமுக இளைஞர் அணி மாநாடுகள்

கடந்த டிச.14-ல் திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல மாநாடு தி.மலையில் நடைபெற்றது. இந்நிலையில், ஜன.24-ல் விருதுநகரில் இளைஞர் அணியின் தென் மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, மத்திய, மேற்கு மண்டல இளைஞர் அணி மாநாடுகளை ஒரே கட்டமாக பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞரணிக்கு கூடுதல் சீட்களை கேட்டுப்பெற, அடுத்தடுத்து இளைஞர் அணி மாநாடுகள் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


