News March 4, 2025
ஆழ்துளை எரிவாயு கிணறு அமைக்க வேண்டாம்: CM

PM மோடிக்கு, CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா பகுதியில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் முயற்சியை கைவிட்டு, ஏல அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் சேதம் ஏற்படும் எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2025
இன்றைய (மார்ச்.05) நல்ல நேரம்

▶மார்ச்- 05 ▶மாசி – 21 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM- 12:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: சித்திரை ▶நட்சத்திரம் : பரணி.
News March 5, 2025
டிரம்ப் வைத்த செக்.. பணிந்த ஜெலன்ஸ்கி

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா உடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா ஒப்புக்கொண்டால் முதற்கட்டமாக கைதிகளை பரிமாறுவது, வான் வழி, கடல் வழி போரை நிறுத்த தாங்களும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அமைதி பேச்சுவார்த்தைக்கு அடம்பிடித்து வந்த ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கான ராணுவ நிதியை டிரம்ப் நேற்று நிறுத்தியதும், தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News March 5, 2025
ஸ்டேஷன் மாஸ்டரை பலி வாங்கிய கூகுள் மேப்!

நாடு முழுவதும் கூகுள் மேப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான பாரத் பார்தி (43) என்பவர் தனது உறவினர் திருமணத்திற்காக நொய்டாவுக்கு காரில் சென்றுள்ளார். அப்போது கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற அவரது கார், நேராக ஒரு கால்வாயில் விழுந்தது. இதில் காருக்குள் தண்ணீர் புகுந்ததில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.