News September 3, 2025

வைரஸ் பரவலுக்கு பயப்பட வேண்டாம்: சுகாதாரத்துறை

image

தமிழகத்தில் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் பரவவில்லை எனவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு இன்புளூயன்சா பாதிப்பு மட்டுமே உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 3, 2025

பட்டா, சிட்டா ஆவணம்.. தமிழக அரசு புதிய மாற்றம்

image

சொத்துகளை வாங்குவது, விற்பதில் உள்ள சிக்கல்களை குறைக்க ஆளில்லா பதிவு (Presenceless Registration) முறையை அறிமுகப்படுத்த TN அரசு தயாராகி வருகிறது. அதன்படி, சொத்துகளை விற்பவரோ, வாங்குபவரோ பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவு நடைமுறைகளை செய்ய முடியும். சார்பதிவாளர் ஆன்லைனிலேயே விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார். இந்தாண்டு இறுதிக்குள் இது நடைமுறைக்கு வருமாம். SHARE IT.

News September 3, 2025

குப்புற படுத்து தூங்குறீங்களா? உஷார்!

image

தூங்கும்போது எந்த position-ல் படுத்து உறங்குவது என்பது இன்றளவும் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. நீங்கள் எப்படி படுத்து உறங்குகிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்கள் முதுகெலும்பின் ஆரோக்கியம் இருக்கிறதாம். நேராக படுத்து உறங்குவதுதான் சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள். குப்புற / ஒரு பக்கமாக படுத்து உறங்குவது முதுகெலும்பு பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.

News September 3, 2025

பாக்.,-ஐ பந்தாடிய S-400.. இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்

image

வான் பாதுகாப்பு அமைப்பான S-400-ஐ அடுத்த 2 ஆண்டுகளில் ரஷ்யா வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ல் 5 S-400 அமைப்புகளை ₹39,000 கோடி மதிப்பில் வாங்க இந்தியா ரஷ்யாவிடம் ஒப்பந்தம் செய்தது. அதில் மூன்றை ஏற்கனவே ரஷ்யா வழங்கிய நிலையில், 2026, 2027-ல் மீதமுள்ள இரண்டையும் வழங்க உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தான் ஏவுகணைகளை S-400 இடைமறித்து தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!