News March 19, 2025

நோன்பிலும் ரத்த தானம்… மதங்களை வென்ற மனிதம்!

image

என்னதான் சாதி, மதம்னு அடிச்சிக்கிட்டாலும் கடைசியா ஜெயிக்கிறது மனிதம்தான். அப்படி ஒற்றுமைக்கு உதாரணமான சம்பவம் கொல்கத்தாவுல நடந்திருக்கு. கிட்னி பாதிக்கப்பட்ட இந்து பெண் சங்கீதாவுக்கு அவசரமா ரத்தம் தேவைப்பட்டிருக்கு. இத தெரிஞ்சிகிட்ட முஸ்லீம் பையன் நசிம் மலிதா, ரம்ஜான் நோன்புக்கு நடுவுலயும் ரத்தம் கொடுத்து அந்த பெண்ணுக்கு உதவி இருக்காரு. மதங்கள தாண்டி நாம எல்லாம் எப்பவும் ஒன்னுதான்!

Similar News

News March 19, 2025

ரகுவரனின் நீங்கா நினைவுகள்…

image

“I KNOW” என்ற வார்த்தையை கேட்டாலே சட்டென நமக்கு நினைவுக்கு வருபவர் நடிகர் ரகுவரன். தமிழ் சினிமாவில், வில்லன் கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்தினாலும், குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியது ஏராளம். முதல்வன் படத்தில் CM, பாட்ஷா படத்தில் கேங்ஸ்டர் என என்றும் நம் நினைவில் நீங்காமல் இருக்கும் அவருக்கு, இன்று 17வது ஆண்டு நினைவு நாள். ரகுவரன் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

News March 19, 2025

மார்ச் 19: வரலாற்றில் இன்று!

image

*1915 – புளூட்டோவின் புகைப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்டது.
*1944 – 2ஆம் உலகப் போர்: நாசி ஜெர்மனிப் படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றின.
*1962 – அல்ஜீரியா விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1972 – இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
*1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். ஏப்ரல் 19இல் இறந்தார்.

News March 19, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 211
▶குறள்: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
▶பொருள்: கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

error: Content is protected !!