News February 25, 2025
ஆதிக்க மொழியை அனுமதிக்க முடியாது: ஸ்டாலின்

இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று TN CM ஸ்டாலின் மீண்டும் உறுதிபட கூறியுள்ளார். தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார். தமிழை காக்கும் அறப்போரில் தானும் ஒருவனாக என்றும் துணை நிற்கப் போவதாகவும் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு 3வது மொழி தேவையா? தேவையற்றதா? உங்கள் கருத்தை கமெண்ட் செய்யுங்கள்.
Similar News
News February 25, 2025
₹500 நோட்டில் ஹிந்தியை அழிக்க முடியுமா? H.ராஜா

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஹிந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என CM ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதனால், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி புகைந்து வருகிறது. இந்த சூழலில், ஹிந்தியை எதிர்ப்பதென்றால் ₹500 நோட்டில் இருக்கும் ஹிந்தியை அழித்து பாருங்கள் என H.ராஜா சவால் விடுத்திருக்கிறார். உங்கள் கருத்து என்ன?
News February 25, 2025
‘ஆள வுட்றா சாமி..’ இந்தியன் 3ல் இருந்து வெளியேறிய லைகா

விக்ரம் படத்தை பார்த்து ‘தலைக்கீழாக தான் குதிப்பேன்’ என 2019ல் நின்றுபோன இந்தியன் 2 படத்தை கடந்த ஆண்டு லைகா ரிலிஸ் செய்தது. இறுதியில் ₹83 கோடி நஷ்டம்தான் மிச்சம். இந்தியன் 3க்கும் சேர்த்து துண்டு போட்ட பிரமாண்ட இயக்குநர், ஒரு பாட்டுக்கு ₹20 கோடி வேணும் என கண்டிஷனும் போட்டாராம். ‘போதும் டா சாமி’ என லைகா படத்தில் இருந்து விலக, ரெட் ஜெயண்ட் தற்போது படத்தை கையில் எடுத்து இருக்கிறதாம்.
News February 25, 2025
மார்ச் 5இல் அனைத்து கட்சிக் கூட்டம்: CM ஸ்டாலின்

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு முறையால் தமிழகத்தில் 8 எம்பி தொகுதிகள் குறைய வாய்ப்பு இருப்பதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்து விவாதிக்க மார்ச் 5ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றார். TN மிகப் பெரிய உரிமை போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு வஞ்சிக்கப் பார்க்கிறது என்றார்.