News January 6, 2025
நடிகை ஹன்சிகா மீது குடும்ப வன்முறை வழக்கு

நடிகை ஹன்சிகா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹன்சிகா சகோதரர் பிரசாந்தின் மனைவியும், சீரியல் நடிகையுமான முஸ்கான் நான்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் கணவர் பிரசாந்த், அத்தை ஜோதி, ஹன்சிகா பணம் கேட்டு மனரீதியில் துன்புறுத்துவதாக கூறியுள்ளார். இதையடுத்து 3 பேர் மீதும் டிசம்பரில் குடும்ப வன்முறை வழக்குப்பதிவு ஆகியுள்ளது. ஆனால் தற்போதே தெரிய வந்துள்ளது.
Similar News
News January 19, 2026
காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுவையின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஜன.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் கடந்த 3 நாள்களாக நடந்த மலர் கண்காட்சி, கார்னிவல் விழாவின் நிறைவு நாளையொட்டி இந்த விடுமுறையானது விடப்பட்டுள்ளது.
News January 19, 2026
EPSக்கு அன்று ஏமாற்று வித்தை.. இன்று: மனோ தங்கராஜ்

அதிமுக தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என EPS கூறியுள்ளார். இதற்கு திமுக தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசிய மனோ தங்கராஜ், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவோம் என்று கூறியதற்கு, அதனை ஏமாற்று வித்தை என்று கூறிவிட்டு, நீங்கள் எதற்காக அறிவித்தீர்கள் என்று கேட்டுள்ளார்.
News January 19, 2026
தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார்

நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அன்று பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.


