News February 17, 2025
இதை செய்தால் கேன்சரை தடுக்கலாம்

புற்றுநோய்க்கான முக்கிய காரணிகளை அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி பட்டியலிட்டது. இந்த மூன்று விஷயங்களை தவிர்த்தாலே கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் 40% குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவை என்னவென்றால், 1) புகை பிடித்தல் 2) மது அருந்துதல் 3) அதீத உடல் எடை. இந்த மூன்றையும் கட்டுக்குள் வைத்துக் கொண்டால், புற்றுநோய்க்கு ஆளாகாமல் நிம்மதியாக வாழலாம். என்ன மக்களே ரெடியா?
Similar News
News December 28, 2025
தருமபுரி: தூக்கில் பிணமாக தொங்கிய +2 மாணவன்!

நல்லம்பள்ளி அடுத்த தண்டுக்காரம்பட்டியைச் சேர்ந்த பிரணீத்குமார் (17). பிளஸ்-2 மாணவரான இவர், அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்தபோது, நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காலையில் மாணவர் பிணமாகத் தொங்குவதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த தொப்பூர் போலீசார், உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News December 28, 2025
வெறும் வயிற்றில் தினமும் இதை குடிக்கலாமா?

கற்றாழை சாறு ஒரு ‘நேச்சுரல் டீடாக்ஸ்’ பானம். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், *ரத்த சர்க்கரை அளவை சீராக்கும் *மலச்சிக்கல், அசிடிட்டி, வயிறு உப்பசத்திற்கு தீர்வாகும் *எடையை குறைக்க உதவும் *சருமத்தை பொலிவாக்கும் *உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. எனினும், ஒருநாளைக்கு 30-50 மி.லி. மட்டுமே பருக வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள். கர்ப்பிணிகள் டாக்டர்கள் ஆலோசனையின் படியே அருந்த வேண்டும்.
News December 28, 2025
ஆட்சியில் பங்கு கேட்டுள்ளோம்: செல்வப்பெருந்தகை

சமீபமாக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் அதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இது குறித்து பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, தேர்தல் பொறுப்பாளர் என்ற முறையில், அவர் இந்த கோரிக்கையை CM ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், தமிழக காங்கிரஸும் அதையே விரும்புவதாக அவர் கூறினார்.


