News June 3, 2024
விரைவில் நாய்கள் கணக்கெடுக்கும் பணி

சென்னையில் இன்னும் ஒரு மாதத்தில் நாய்கள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அண்மையில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து பேசிய அவர், நாயை நாய் எனக் கூறவிடாமல் குழந்தை என்று கூறுவதாக வேதனை தெரிவித்தார். அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பிய அவர், நாய் வளர்ப்பவர்கள் உரிய லைசென்ஸ் பெறுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
Similar News
News September 20, 2025
சூரிய கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை

இந்துமத நம்பிக்கையின் அடிப்படையில் <<17774785>>நாளை சூரிய கிரகணத்தின்<<>> போது செய்ய கூடாதவை: *நோயாளிகள் தவிர்த்து, மற்றவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம் *இந்த நாளில் புதிய திட்டங்களை தொடங்க வேண்டாம் *கிரகணத்தின் போது சமைக்க வேண்டாம் *கூரான பொருள்கள் பயன்பாட்டை தவிர்க்கவும் *சாப்பிடவோ அருந்தவோ கூடாது *கடவுள் சிலைகள், துளசி செடியை தொடுவதை தவிர்க்கவும். *உடலுறவை தவிர்க்கவும். இதை SHARE பண்ணலாமே.
News September 20, 2025
இயற்கையோடு வாழ்ந்தவர் இயற்கை எய்தினார்

‘தாவரங்களின் என்சைக்ளோபீடியா’ என்று போற்றப்படும் நாட்டின் தலைசிறந்த தாவரவியல் விஞ்ஞானி Dr.ஹேமா சானே (85) காலமானார். புனே கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றிய இவர் ஓய்வுக்கு பின்பும் ஆய்வை தொடர்ந்தார். இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக சாகும்வரை மின்சாரத்தை பயன்படுத்தாத இவர், தன் சொத்துகளை தான் வளர்த்த நாய், பூனைகள், கீரிப்பிள்ளை மற்றும் பறவைகளுக்கு எழுதி வைத்திருக்கிறார்.
News September 20, 2025
விஜய்க்கு உடனுக்குடன் பதில் தரும் DMK

முதலீடுகள் பற்றி விஜய் விமர்சித்த நிலையில், <<17773206>>CM ஸ்டாலின்<<>> வீடியோ மூலம் பதிலளித்திருந்தார். நாகை ஹாஸ்பிடல் குறித்த குற்றச்சாட்டுக்கும் உடனடி பதில் தந்தார் மா.சுப்பிரமணியன். முன்னதாக, DMK vs TVK என்ற தவெகவின் நிலைப்பாட்டுக்கு, ‘இதற்கெல்லாம் பதிலளிக்க அவசியமில்லை’ என ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு CM, DCM முதல் அமைச்சர்கள் வரை பதிலளித்து வருவது பேசுபொருளாகியுள்ளது.