News February 11, 2025
விஜய்க்கு 20% வாக்குகள் உள்ளதா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738410234721_1246-normal-WIFI.webp)
<<15429075>>தவெக தலைவர் விஜய்யை சந்தித்த பிரசாந்த் கிஷோர்<<>>, அவருக்கு 15% முதல் 20% வாக்குகள் கிடைக்கலாம் என்று சொன்னதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஒருபுறம், புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் விஜய்யால் 5% வாக்குகளைக் கூட பெற முடியாது என்று ஆளும் கட்சியினர் கூறி வருகின்றனர். இதில் எது உண்மையாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பலத்தை நிரூபிப்பாரா விஜய்?
Similar News
News February 11, 2025
துரோகம் செய்வது ஆண்களா? பெண்களா? ஷாக் ஆவீங்க…
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739289738170_347-normal-WIFI.webp)
திருமணமான இந்தியர்களில் 55% பேர் குறைந்தது ஒருமுறையாவது தங்கள் துணைவருக்கு துரோகம் இழைத்துள்ளனர் என்கிறது ஓர் ஆய்வுமுடிவு. இவர்களில் பெண்கள் (56%) தான் அதிகம். ஆண்கள் 44% பேர். திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களில் 48% பேர் குழந்தை பெற்ற தாய்மார்கள். பிரபல கிளீடன் செயலி, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் திருமணமான ஆயிரக்கணக்கானோரிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இது மாற்றமா… தடுமாற்றமா?
News February 11, 2025
ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739290086827_1246-normal-WIFI.webp)
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா நாளை விளையாடவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது. முதல் இரண்டு போட்டிகளை வென்றிருக்கும் இந்திய அணி, ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஏற்கெனவே 4 டி20 போட்டிகளை வென்று இந்தியா மொத்த தொடரையும் கைப்பற்றியுள்ளது.
News February 11, 2025
7 வயது மகனை கொன்ற தந்தை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737607430327_1241-normal-WIFI.webp)
பிஹாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், தன் 7 வயது மகனை, தலையை துண்டித்து தந்தையே கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. 2-ம் வகுப்பு படிக்கும் மகன் ஸ்கூல் ஃபீஸ் கேட்டு தொல்லை செய்யவே, இப்படி செய்ததாகவும், இனி அவனுக்காக படிப்பு செலவு தேவையில்லை, வீடு வாங்க வேண்டியதில்லை, மொத்தத்தில் செலவில்லை என்று சொல்லி அந்த கொடூரன் வீடியோவும் வெளியிட்டுள்ளான். இதனால் விஷயம் வெளியே தெரிய, அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.