News February 13, 2025
Kiss பண்ணால் இப்படியாகுமா…
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739381770923_347-normal-WIFI.webp)
அன்புடன் முத்தமிடும் போது ஆக்சிடோசின், டோபமைன் மற்றும் செரடோனின் ஹார்மோன்களை மூளை சுரக்கிறது. இது மகிழ்ச்சியையும் திருப்தி உணர்வையும் ஏற்படுத்துகிறது. இதனால் பாசப் பிணைப்பும் வலுவடைகிறது. அதேநேரம், மன அழுத்தம் குறைகிறது. காதலர்கள், தம்பதியர் முத்தமிட்டுக் கொள்ளும் போது, பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இதனால் தாம்பத்ய இன்பம் அதிகரிப்பதுடன், காதலும் பிணைப்பும் வலுப்படுகிறது.
Similar News
News February 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739470207532_785-normal-WIFI.webp)
இன்று (பிப்.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
News February 14, 2025
கைக் குழந்தையுடன் தீபிகா படுகோன்.. இதுதான் உண்மை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739466353584_1142-normal-WIFI.webp)
தீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இதுவரை அவர்கள் அக்குழந்தை படத்தை வெளியிடவில்லை. இந்நிலையில், தீபிகா படுகோன் கைக்குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் அது உண்மையில்லை, ஏஐ தொழில்நுட்பத்தில் உருவானது. இதேபோல், டிசம்பரிலும் போலி படம் வைரலானது.
News February 14, 2025
சிஆர்பிஎஃப் வீரர் வெறிச்செயல்!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739467693877_1204-normal-WIFI.webp)
மணிப்பூரில் சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படை முகாமில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 120வது பட்டாலியனைச் சேர்ந்த காவலர் சஞ்சய் குமார் என்பவர் இன்று காலை திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சக வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 வீரர்கள் படுகாயமடைந்தனர். அதன் பிறகு, தன்னை தானே சுட்டுக் கொண்டு சஞ்சய் குமார் தற்கொலை செய்து கொண்டார்.